Monday, March 30, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் -93

நட்பின் இலக்கணம்
-----------------------------------

நல்ல நட்பு என்பதின் இலக்கணம் என்ன ?

இதைச் சொன்னதுமே , உங்களில் பலர்..

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு (787)

என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார்.அதாவது..


அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படி கைகள் உடனடியாக செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தை ப் போக்கத் துடித்துச் செல்வதே நட்புக்கு இலக்கணமாகும்.
எனச் சொல்வீர்கள்.

வள்ளுவர் அதை மட்டும் சொல்லவில்லை.வேறொன்றும் சொல்கிறார்.


நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை (789)

என்கிறார்.

அதாவது

மனவேறுபாடு இல்லாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவதுதான் நட்பின் சிறப்பாகும்.

சரி..நண்பன் நீங்கள் செய்ய வேண்டாம் எனும் ஒரு செயலை செய்துவிடுகிறான்.நான் அப்பவே "செய்யாதே" என்று சொன்னேனேஎன்று சொல்லிவிட்டு வாளாயிராது.. நண்பனை சிக்கலில் இருந்து விடுவிக்க வேண்டுமாம் அதுதான் நட்புக்கு இலக்கணம்.

முகத்தளவில் இன்முகத்தோடு இருந்தால் போதாது.மனமும் இனிமையாய் இருக்க வேண்டுமாம்.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு (786)

இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமில்லை.இதயமார நேசிப்பதே உணமையான நட்பாகும்.
.




No comments: