Monday, March 16, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 81

மனைவி அமைவதெல்லாம்..
-------------------------------------------

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள்.

வள்ளுவர் இல்வாழ்க்கை சிறப்பாக அமைய நற்பண்புள்ள மனைவி வேண்டும் என்கிறார்.

நல்ல பண்புள்ள மனைவி அமைந்துவிட்டால் இல்வாழ்க்கை சிறப்புடையதாக இருக்கும்...எனும் வள்ளுவர் மேலும் சொல்கிறார்..

இல்லறத்துக்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம்  நடத்துபவள், கணவனின் வாழ்விற்குப் பெருந்துணையாவாளாம்.

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை (51)

குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின்  சிறப்பாகும்.அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது.

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு (60)

வாழ்க்கைத் துணைநலம் எனும் அதிகாரத்தில் இல்வாழ்க்கை நன்கு அமைய நற்பண்புள்ள மனைவி அமைய வேண்டும் என வள்ளுவர் அழுத்தம் திருத்தமாய்ச் சொல்லியுள்ளார் 

No comments: