Monday, March 23, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 88

அன்பு செலுத்துவோம்
---------------------------------------

எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும்.

 உடலும்,உயிரும் போல, அன்பும்..நம் செயலும் இருக்க வேண்டும்.

உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது.அன்புக்குரியவரின் துன்பங்களை காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டு விடும்..என்கிறார் இக்குறளில் வள்ளுவர்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும் (71)

உலகில் இன்பமாய் வாழ்கிறவர்கள் அன்புள்ளம் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

ஒரு பாலைவனம்.அதில் மரம் ஒரு பட்டுப் போய் நிற்கிறது.அது துளிர்க்குமேயானால், அதனால் யாருக்கு என்ன பயன் கிடைக்கும்?அதுபோலவாம்  அன்பு இல்லாதவர்களின் வாழ்க்கை.

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று (78)

அவன் அழகானவன்.ஆனால் அன்பில்லாதவன்.மனதில் அன்பு இல்லாதவன். ம்னம் விகாரமானவன்.அவனின் புறத்துறுப்பு அழகாய் இருந்து என்ன பயன்..அகம் அழகாய் இல்லையே.

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பண்பி லவர்க்கு (79)

அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன் (எந்த பயனும் இல்லை)

நாம் அனைவரிடமும் அன்பு செலுத்துபவராக இருப்போம்.

No comments: