Tuesday, October 7, 2008

சித்ரான்னம் 7-10-08

1. ரஜினி வீட்டு கொலுவிற்கு..தயாளு அம்மாளும்,துர்காவும் சென்றார்கள்
(இது செய்தி)
விஜயதசமிக்கு ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா..இல்லையா என்பது தெரியும் என்றார்கள்
அதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்காது என நம்புவோம்.

2.கலைஞர் இலங்கை தமிழர் பிரச்னைப் பற்றி பிரதமருடன் தொலை பெசியில் பேசியதாகவும்..பிரதமர் நாத் தழுதபடி ஆவண செய்வதாக கூறியதாக கலைஞர் பொதுக்கூட்டத்தில் பேச்சு.,
(எப்பவும் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டிருக்கும் பிரதமர்..இப்பொழுது பேசக்கூட முடியாத நிலையில் இருக்கிறார் போல இருக்கிறது )

3.சிரஞ்சீவி கட்சியில் இப்பவே பாராளுமன்ற தேர்தலுக்கு நிற்க இரண்டு லட்சம் பேர் மனு கொடுத்துள்ளனர்
(மொத்த தொண்டர்களும் மனு கொடுத்துவிட்டனர் போல இருக்கிறது)

4.தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களுக்கு மின் வெட்டு தொடரும் என மத்திய மின் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறினார்
(அதற்குப் பின்....மக்களுக்கு அதுவே பழகிவிடும் என்கிறாரோ)

5.அரசுப்பணியில் இருக்கும் மகளிரின் பேறுகால விடுமுறையை 6 மாதங்களாக உயர்த்தியது மத்திய அரசு
(பார்லிமெண்டில் பெண்கள் இட ஒதுக்கிடு 33% என்ன ஆயிற்று என யாரும் கேட்கக்கூடாது இப்போதயக்கு)

6.கேப்டனின் விருதகிரி படத்தில் சிலரை மறைமுகமாக டபாய்க்கும் பெயர்கள் கொண்ட பாத்திரங்கள் இருக்குமாம்
(வடிவேலுவை வெடிவேலு என ஒரு கேரக்டர் ஆக்கிடுவாங்களோ)

2 comments:

கோவி.கண்ணன் said...

காஞ்சனா அம்மா 'சமையல் குறிப்பு' போட்டு இருக்காங்க... என்று வந்து பார்த்தால் ராதாகிருஷ்ணன் ஐயாவோட மசாலா !
:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

மசலாவை ருசிச்சீங்களா..இல்லையா?