Tuesday, October 14, 2008

ரஜினி அரசியல் பிரவேசம் இல்லை..தலைவர்கள் கருத்து

கலைஞர்- ரஜினியின் நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியவை.ஒரு நடிகன் தன் எல்லையை உணர்ந்துள்ளார். உடன்பிறப்பே இதிலிருந்து அவர் நம்மை மறைமுகமாக ஆதரிக்கிறார் என்று இறுமாப்புள்ளவர்களுக்கு விளங்கவில்லை என்றால் ..உனக்குமா விளங்கவில்லை.
ஜயலலிதா-இவர் அரசியலில் வந்திருந்தால்..தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்றியிருக்க முடியாது.என்னால் மட்டுமே முடிந்திருக்கும்.,நாளை தொண்டர்கள் போயஸ் தோட்டத்தில்..என் வீட்டில் மின்சாரம் இல்லாததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் பண்ணுவார்கள்.
காங்கிரஸ்-(தலைவர்கள் அதிகம் உள்ளதால் ஒரு குறிப்பிட்ட தலைவர் தன் பெயர் வெளியிடுவதை விரும்பாமல்)இந்த விஷயத்தில் தனிப்பட்ட முறையில் கருத்து சொல்வதைவிட அன்னை சோனியாவின் கருத்தே எங்கள் கருத்து.
விஜய்காந்த்-ரஜினியின் அறிக்கை கருணாநிதியின் சதிவேலைதான்..வரும் தேர்தலில் மக்கள் எனக்கு வாக்களித்து இதை நிரூபிப்பார்கள்.
ரஜினி ரசிகன்- அவர் மனதில் ஏதோ இருக்கிறது..கண்டிப்பாக எங்கள் உணர்வுகளை அவர் புரிந்துக் கொள்வார்..சத்யநாராயணன் பார்த்துக்கொள்வார்.நிச்சயம் தலைவதான் அடுத்த முதல்வர்.
பி.வாசு-அப்பாடா...அவ்வலவுதான்னு நினைச்சேன்..கண்டிப்பா அவரை வைச்சு இன்னோரு படம் இயக்கிடுவேன்.
ரஜினி-பாபா படம் முடிஞ்சதும் நுழைய நினைத்தேன்..படம் அவுட்..இப்போ குசேலன் வந்ததும் நுழைய நினைச்சேன் ..ஃப்ளாஃப்..அதனாலே அடுத்து எந்திரன் வந்ததும் பார்த்துக்கலாம்.
பொதுமக்கள்-அப்பாடா...இன்னொரு கட்சி கூப்பாடிலிருந்து தப்பித்தோம்
ராமதாஸ்-கலைஞர் ஆட்சி குறைகளை ஆராய்ந்து வருவதால் இப்பொதய்க்கு கருத்து இல்லை.ஆனால் மக்கள் நடிகர்களை நம்பக்கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறோம்.

((பேட்டி-நமது 'சரடு நிருபர்'))

13 comments:

சின்னப் பையன் said...

:-))))

கோவி.கண்ணன் said...

:)

சரவணகுமரன் said...

சூப்பரு...

பூச்சாண்டியார் said...
This comment has been removed by the author.
பூச்சாண்டியார் said...

// உடன்பிறப்பே இதிலிருந்து அவர் நம்மை மறைமுகமாக ஆதரிக்கிறார் என்று இறுமாப்புள்ளவர்களுக்கு விளங்கவில்லை என்றால் ..உனக்குமா விளங்கவில்லை.
//

நல்ல நகைச்சுவை உணர்வு அய்யா உங்களுக்கு..

குடுகுடுப்பை said...

நல்ல நகைச்சுவை.

எனக்கு வழிவிட்டு ஒதுங்கி இருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன்.

Kanchana Radhakrishnan said...

// ச்சின்னப் பையன் said...
:-))))//

வருகைக்கு நன்றி ச்சின்னப்பையன்

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி கோவி.கண்ணன்

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி விஜய் ஆனந்த்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வருகைக்கு நன்றி
சரவணகுமரன்//

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பூச்சாண்டியார் said...
// உடன்பிறப்பே இதிலிருந்து அவர் நம்மை மறைமுகமாக ஆதரிக்கிறார் என்று இறுமாப்புள்ளவர்களுக்கு விளங்கவில்லை என்றால் ..உனக்குமா விளங்கவில்லை.
//

நல்ல நகைச்சுவை உணர்வு அய்யா உங்களுக்கு..///

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி பூச்சாண்டியார்

நசரேயன் said...

பட்டையை கிளப்பிடீங்க...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
பட்டையை கிளப்பிடீங்க...//

வருகைக்கு நன்றி நசரேயன்