Thursday, February 19, 2009

சிவாஜி ஒரு சகாப்தம்..- 1

சிவாஜி கணேசன்...

தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்..

இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான்.

ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது.
படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப்படித்தான் இருப்பார்கள்..என்று நம் கண் முன் நிறுத்திய ஒப்பற்ற கலைஞன்.

ஆம்...அவர் ஒரு பல்கலைக்கழகம்..சகாப்தம்..

இனி வாரம்தோறும் வெள்ளியன்று..1952 முதல் அவர் நடித்த படங்கள் பற்றி..எழுதலாம் என்ற ஆசை.இப்பதிவு..அவர் நடிப்புப் பற்றி மட்டுமே..இதில்..அரசியல் வாழ்க்கை போன்றவற்றை எழுதப்போவதில்லை.

என் நினைவிலிருந்தும்..படித்த சில புத்தகங்களை வைத்தும் இப்பதிவு எழுதப்படுவதால்..இதில்..ஏதேனும் விட்டுப்போயிருந்தாலோ..தவறிருந்தாலோ..அவற்றை சுட்டிக்காட்டினால்..பதிவில் மாற்றம் செய்துவிடுகிறேன்.

இனி..கலையுலக சக்கரவர்த்தியாய் திகழ்ந்தவர் பற்றி..

தமிழ் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த வி.சி.கணேசன் 1952ல் பராசக்தி மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார்.இவர் ஏற்ற பாத்திரத்தில் ..கே,ஆர்.ராமசாமி நடிக்க வேண்டும்..என்று சம்பந்தப் பட்டவர்கள் கூற..
படத் தயாரிப்பாளர் பெருமாள் சிவாஜிதான் அப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். அப்படத்தின் கதை வசனம் கலைஞர் ..கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் கணேசன் பேசிய முதல் வசனம் 'சக்சஸ்..சக்சஸ்" என்பதுதான்.பின் திரையில் வெற்றியுடன் ஆட்சி புரிந்தார் என்று நாம் அறிவோம்.

அதே வருஷம் வந்த படம் பணம்..என்.எஸ்.கே.,மதுரம்.,பத்மினி., ஆகியோர் நடித்தது.

பராசக்தி 42 வாரங்கள் ஓடி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

1953ல் சிவாஜி நடித்து வந்த படங்கள்..பூங்கோதை,திரும்பிப்பார்,அன்பு,கண்கள்,மனிதனும் மிருகமும்,பரதேசி(தெலுங்கு),பொம்புடு கொடுகு(தெலுங்கு)

பூங்கோதையில் அஞ்சலி தேவி நாயகி,படம்  வெற்றி.அடுத்து..திரும்பிப்பார்..இதிலும் கலைஞர் வசனம்..பண்டரிபாய் கதாநாயகி..படம் வெற்றி..இதில் இவர் ஏற்று நடித்த பாத்திரம் பெயர் பரந்தாமன்..காதானாயகன் கெட்டவன்.சிவாஜி..இமேஜ் பற்றி கவலைப்படாமல்..நடிப்பவர் என்பதற்காகவே இதைச் சொல்கிறேன்.

அன்பு -

இத்திரைப்படம் வெளியான நாள்..24-7-1953

சிவாஜியுடன், டி.ஆர்.ராஜகுமாரி, பத்மினி,பாலையா ஆகியோர் நடித்திருந்தனர்.
விந்தன் எழுத்தில் எம்.நடேசன் திரைக்கதையில் நடேஷ் ஆர்ட் பிக்க்ஷர்ஸ் சார்பில் எம்.நடேசன் இயக்கியிருந்தார்.
டி ஆர்.பாப்பா இசை.

தங்கம் ,ராஜமாணிக்கம் முதலியார் என்பவர்க்கு இரண்டாம் மனைவியாய் வாழ்க்கைப்பட்டவர்.தங்கத்தின் திருமணத்திற்கு முன்னறே முதலியாருக்கு..செல்வம் என்ற மகனும், லட்சுமி என்ற ஒரு மகளும் இருந்தனர்.முதலியார் இறக்கும் காலகட்டத்தில் தங்கம் கருவுற்றிருந்தாள்.செல்வம், மாலதி என்பவளைக் காதலிக்க..இது விரும்பாத வில்லன் திருமலை..த்ங்கத்தின் வயிற்றில் வளரும் கரு ..செல்வத்தின் மூல்மாகத்தன என்ற வதந்தியை பரப்ப..மலதியும் அதை ந்மபும் சூழல் ஏற்படுகிறது.இப்பழியிலிருந்து செல்வமும், தங்கமும் எப்படி வெளிவந்தனர் என்பதே மீதிக் கதை.

இப்படம் அபெக்க்ஷா என்ற பெயரில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.    

மற்ற படங்களும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை.

1954..அடுத்த பதிவில்...

9 comments:

HS said...

Submit your blog to the Tamil Blogs directory http://kelvi.net/topblogs/

சின்னப் பையன் said...

அருமையான தொடரின் ஆரம்பம்....

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சத்யா

நசரேயன் said...

நல்ல ஆரம்பம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்

ஜோ/Joe said...

நன்றி! நன்றி! நன்றி!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

// ஜோ / Joe said...
நன்றி! நன்றி! நன்றி!!//

நன்றி! நன்றி! நன்றி ஜோ

sivajifan said...

Dear Sir,
I came to know this blog through Joe Sir. As an ardent fan of Nadigar Thilagam Sivaji Ganesan, I wholeheartedly appreciate your writings and expect more.
Pls let me know your opinion on my site www.nadigarthilagam.com, a website dedicated to the filmography of Nadigar Thilagam Sivaji Ganesn.
Raghavendran.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி NTFans