Monday, February 2, 2009

ஆட்சி மாற்றமாவது...வெங்காயமாவது...

இந்தியாவிலும்...மாநிலங்களிலும்..ஆட்சி மாற்றங்கள்..ஏற்பட...தேர்தலுக்கு முன் ஒரு வருடத்தில் எற்பட்ட சம்பவங்களும் காரணமாய் அமைவதுண்டு.

தமிழகத்தை பொறுத்தவரை..தி.மு.க., ஆட்சியைப் பிடிக்க முதலில் உதவியவை...அரிசி பிரச்னை,மொழி பிரச்னை, ராஜாஜியின் சுதந்திரா கட்சியுடன் கூட்டு.

இந்திரா காந்தி..மத்தியில் ஆட்சி இழக்க காரணமாய் இருந்தது..'எமெர்ஜென்ஸியும்...அதனால் மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களும்...தலைவர்கள் பட்ட கொடுமையும்.இதை எண்ணியவாறே இருந்ததால் தான் மனம் வெதும்பி..காமராஜர் இறந்தார்..என்றும் சொல்வதுண்டு.

பா.ஜ.க.,மத்தியில் ஆட்சியை இழக்க..ஒரு முறை வெங்காய தட்டுப்பாடு..காரணமாய் அமைந்தது.

அ.தி.மு.க., ஆட்சி இழக்க..வளர்ப்பு மகன் திருமணமும்..சசிகலா& கோ., வின் ஊழல்களும்..ஒரு முறை காரணமாக அமைந்தது.மற்றொரு முறை..அரசு ஊழியர்கள் கைது காரணாமாய் அமைந்தது.

ஆனால்...தற்போது..தமிழகத்தைப் பொறுத்தவரை..பாராளுமன்ற தேர்தலில்..40 க்கு 40 கிடைப்பது கஷ்டம்.(பாண்டியும் சேர்த்து)ஆனால்..மூன்றாம் அணி என்று ஒன்று உருவாகுமே ஆனால்..வோட்டுகள் சிதறும்..தி.மு.க., காங்கிரஸ்..கூட்டணி மீண்டும் வெற்றிப் பெறும். இவர்கள் தமிழர் பிரச்னையில் நிலைபாடு எப்படி இருந்தாலும்.

இதை உணர்ந்துதான்..ராமதாஸும் கூட்டணி விவகாரத்தில் அடக்கி வாசிக்கிறார்.இல்லையேல்..இவ்வளவு பேசுபவர்..காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என வெளியே வரலாமே...

பா.ஜ.க.வோ..ஒரு அகில இந்திய தேசியக் கட்சிக்கான வலு இழந்து காணப்படுகிறது.கம்யூனிஸ்டுகளை நம்பும் கட்சிகள்..மண்குதிரையை நம்புவதைப் போலத்தான்.

மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜி..காங்கிரஸை கூட்டணிக்கு அழைக்கிறார்..பீகாரில் லல்லு.,யு.பி.யில் முலாயம் சிங்..இப்படி போகிறது..

அதனால்தான் காங்கிரஸ் பிராந்திய கட்சியுடன் கூட்டு வைப்போம் என்கின்றனர்.,இவர்களை விட்டால்..அவர்களுக்கும் போக்கிடம் இல்லை..

ஆனால்..இந்திய மக்களுக்கு..தேர்தல் என்றால்...

இந்த ஊழல் அரசியல்வாதிகளை விட்டால்..வேறு வழியில்லை..வோட்டளிப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை என கூறிக்கொண்டு ..பெருச்சாளிகளுக்கு ஓட்டளித்துவிட்டு..ஒருநாள் விடுமுறை கிடைத்த ஆனந்தத்தில்..சாப்பிட்டு உறங்கும் ஆனந்தம்.

No comments: