Friday, February 6, 2009

வாய் விட்டு சிரியுங்க...

மனைவி- காக்கா கத்துது..ஊர்ல இருந்து எங்க அம்மா வருவாங்க போல இருக்கு
கணவன்-கழுதை கத்தினா யார் வருவாங்க?
மனைவி- அப்போ..எங்க மாமியார் வருவாங்கன்னு அர்த்தம்.

2.பெட் ரோல் விலை ஏறிப்போச்சுன்னு காரை வித்துட்டு...ஒட்டகம் வாங்கிட்டேன்..ஐந்து லிட்டர் த்ண்ணீருக்கு 40 கிலோமீட்டர் போகுது.

3.டாக்டர்..என் நோயை குணப்படுத்திட்டீங்க..நன்றி
நான் என்ன செய்தேன்..அந்த ஆண்டவன்தான் காப்பாற்றினான்
அப்போ பில் பணத்தை ஆண்டவனுக்கு அனுப்பிடறேன்

4.அந்த ஸ்கூல்ல..ஃபீஸை ராத்திரிதான் வாங்குவாங்க
ஏன்?
அப்போதான் யாரும் பகல் கொள்ளைன்னு சொல்லமாட்டாங்களாம்

5.புதுசா..வெட் கிரைண்டர்,வாஷிங் மெஷின்..எல்லாம் வாங்கி இருக்கேன்
அடிப்பாவி..உன் கல்யாணத்திற்கு எனக்கு இன்விடேஷன் கொடுக்கலையே

6.தலைவர் ஜோசியம் கேட்கப் போய் இருக்கார்
எதற்கு?
பகுத்தறிவு மாநாடு நடத்த நல்லநாள் கேட்டு

4 comments:

சின்னப் பையன் said...

சீக்கிரமே வந்து 'ஒ ஓ' பயிற்சிப்பள்ளி ஆரம்பிச்சிடறேன்.... ஒ ஓ = ஒட்டக ஓட்டுனர்...:-))

T.V.ராதாகிருஷ்ணன் said...

உங்கள் வரவை அன்புடன் எதிர்ப்பார்க்கிறேன்

கோவி.கண்ணன் said...

//2.பெட் ரோல் விலை ஏறிப்போச்சுன்னு காரை வித்துட்டு...ஒட்டகம் வாங்கிட்டேன்..ஐந்து லிட்டர் த்ண்ணீருக்கு 40 கிலோமீட்டர் போகுது.//

:)

//4.அந்த ஸ்கூல்ல..ஃபீஸை ராத்திரிதான் வாங்குவாங்க
ஏன்?
அப்போதான் யாரும் பகல் கொள்ளைன்னு சொல்லமாட்டாங்களாம்//

Super !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கோவி