Friday, February 13, 2009

மனிதரில் இத்தனை வகைகளா.?..- இறுதி பகுதி

(http://tvrk.blogspot.com/2009/02/1.html)part one)
மனோபாவம்....இதை மாற்றிக் கொண்டால்..நம் குணங்களும் மாறும்.ஒருவரின் மனோபாவம்.. மற்றவர்களை குறை சொல்வதில்தான் ஆரம்பிக்கிறது.நாளாக..ஆக..எதிலும் எல்லாவற்றிலும் குறை காண்பது என்ற வழக்கம் ஏற்பட்டு விடுகிறது.

பின் அதுவே..நாம் செய்யும் செயல்களைத் தூண்டுகிறது.இவற்றிலிருந்து ஒருவனால் மீண்டு வரமுடியுமா? கண்டிப்பாக முடியும்...

வெற்றியும்...தோல்வியும்..பயமும்..தைர்யமும்..சோகமும்..இன்பமும்..நாம் நம் மனதை எப்படி பழக்கப்படுத்திக் கொள்கிறோமோ..அப்படியே அமையும்.எதிலும் சந்தோஷம்,துணிவு,வெற்றி காண மனதை மாற்றிக்கொள்ளுங்கள்.

ஒரு காரியத்தில்..வெற்றி அடைய வேண்டும் என்பவர்கள்..எதிலும் நல்லதையே பார்க்கிறார்கள்.எந்த காரியத்தையும் முடிக்க முடியும் என எண்ணுகிறார்கள்.இவர்கள் சிறிய..சிறிய காரியங்களாக எடுத்து..அதில் சாதனை புரிந்து..வெற்றி மனோபாவத்தை வலிமைப்படுத்துகிறார்கள்.

வெற்றியடைபவர்கள்..கருங்கல்லை..கருங்கல்லாய் பார்ப்பதில்லை.ஒரு சிற்பமாக பார்ப்பார்கள்.

வெற்றிகாண விரும்புபவர்கள்..வாய்ப்பை எதிர் நோக்கிக்கொண்டிருப்பர்.

ஆரம்ப தோல்வி கண்டு மனதளர்ச்சி வேண்டாம்.தோல்வி இல்லா மனிதன் இல்லை.தோல்வி ஒரு பாடம்..தோல்வி ஒரு அனுபவம்.அடுத்த முறை வெல்வேன் என தோல்வியடைவோர் எண்ண வேண்டும்.

உங்கள் மனோபாவம்தான் வெற்றிக்கான பாதை.நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.அதை பழக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.எதிலும் வெற்றி..எதிலும் வாய்ப்பு..எக்கஷ்டம்
வந்தாலும் மீளுதல்..இதுவே நம் அணுகுமுறையாக இருக்க வேண்டும்.

இந்த மனோபாவம் என்னும் தோழன்தான் உங்களுடன்..உங்கள் மனம் இயங்கும் வரை..உணர்ச்சி துடிப்புகள் அடங்கும் வரை..இருக்கப் போகிறவன்.

அவன்தான் உங்கள் தோழன்.

அவன்தான் உங்கள் உயிர் காக்கும் தோழன்.

10 comments:

goma said...

நம்மை நம் எண்ணங்கள்தான் செதுக்குகின்றன,என்பதை அழகாக சுருக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

goma said...

இத்தொடரின் மற்ற பாகங்களையும் வாசித்தபின் வருகிறேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

நசரேயன் said...

நல்லா இருக்கு ஐயா

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி நசரேயன்

கோவி.கண்ணன் said...

நிறைய பகுதிகள் எதிர்பார்த்தேன் ஒரு இண்டர்வல் அப்பறம் வணக்கம் போட்டுவிட்டிங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

இப்போதெல்லாம்..அறிவுரைகள் யாரு(க்கு)ம் (பி)படிப்பதில்லையே கோவி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

படித்துவிட்டு வருகிறேன்

கோவி.கண்ணன் said...

//இப்போதெல்லாம்..அறிவுரைகள் யாரு(க்கு)ம் (பி)படிப்பதில்லையே கோவி.//

முதல் பகுதியில் எழுதியது எதும் அறிவுரை இல்லையே....அனுபவம் தானே, பிறகென்ன ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

///முதல் பகுதியில் எழுதியது எதும் அறிவுரை இல்லையே....அனுபவம் தானே, பிறகென்ன ?///

நாலு பகுதிகள் அறிவுரை ஆகத்தான் எழுதி இருந்தேன்..ஆனால் முதல் பகுதியை பார்வையிட்டவர்கள் குறைவு...அதுதான்