Thursday, February 26, 2009

அபி அப்பாவும்...இந்த பதிவும்..

அபி அப்பா இன்னிக்கு ஒரு பதிவு போட்டிருக்கார்.பாடாவதி ஹிந்தி வாத்தியார்ன்னு.
http://abiappa.blogspot.com/2009/02/blog-post_26.html


அதைப்படிச்சதும்..எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வந்தது.இது உண்மையா நடந்ததான்னு எனக்குத் தெரியாது.ஆனா உங்களைப்போல ஒரு நண்பர் சொன்னது.

அந்த பகுதி..அந்தணர்கள் நிறைந்த பகுதி.அங்கே சாக்கடை அடைத்துக் கொண்டுவிட்டது.தெருவிற்குள்ளே நுழையக்கூட முடியாத படிக்கு..ஒரே கப்பு.

அவங்களைப் பத்தித் தெரியுமே..ஒரு ஓய்வு பெற்ற பெரிசு..மேயருக்கு..ஒரு புகார் கடிதம் எழுதிட்டு..ஹிந்து பத்திரிகைல..லெட்டர்ஸ் டூ தி எடிட்டர் காலத்திற்கும் எழுதிடுத்து. பலன்...லெட்டர் பிரசுரமானதுடன் சரி..நிவாரணம்..கிடைக்கவில்லை.ஆனால் பெரிசோ..எல்லார் கிட்டேயும் பெருமையா..என் பேரு பேப்பர்ல வந்துடுத்து குதிச்சுதாம்.

உடனே இன்னொரு பெரிசு 'அதனால..என்ன ஓய்..பிரயோசனம்...சாக்கடை அடைப்பு..நீங்களையே..' ன்னு உசுப்பி விட்டுடுத்து.

இவருக்கு கோபம் வந்து..தலைமைசெயலகத்திற்கு..அலையாய்..அலைந்து..முதல்வர் அலுவலகத்தில் மனு கொடுத்தது.

தேர்தல் வரும் சுழல்..இருந்ததால்..மனுவும்..முதல்வர் கண் பார்வைக்கு சென்றது. உடனே..வாக்குகள் மீது கண் இருந்ததால்..முதல்வரும்..நகர மேயருக்கு..அந்த கடிதத்தில்..சில எழுத்துக்களை எழுதி
ஃபார்வேர்ட் பண்னினார்..

அப்புறம் என்ன என்கிறீர்களா?

அப்பறம் தான் விசேஷமே..முதல்வர் எழுதியதைப்படித்ததும்...மேயருக்கு..அவர் என்ன சொல்ல வருகிறார்..சரி செய்ய சொல்கிறாரா..வேண்டாம் என்கிறாரா எனத் தெரியவில்லையாம்..ஆமாம் அப்படி..முதல்வர் என்ன எழுதினார் என்கிறீர்களா?

அவர் எழுதியது...

அந்தணர் வாழும் பகுதி...ஆவன செய்யவும்...

13 comments:

அத்திரி said...

ஐயா இந்த மேட்டர்ல ஏதும் உள்குத்து............ இருக்கா???????

மணிகண்டன் said...

****
ஐயா இந்த மேட்டர்ல ஏதும் உள்குத்து............ இருக்கா???????
*****
ஹா ஹா ஹா !

T.V.ராதாகிருஷ்ணன் said...

எந்த குத்தும் இல்லை...சும்மா நகைச்சுவைக்கு அவ்வளவுதான்.வருகைக்கு நன்றி அத்திரி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மணிகண்டன்

goma said...

உள் குத்தோ இருக்கோ இல்லையோ.சின்னத்தின் மீது நச்சுனு ஒரு குத்து இருக்கணும்...
சரிதானே.
ஆ..வ..ன செய்யவும்

goma said...

உள் குத்தோ இருக்கோ இல்லையோ.சின்னத்தின் மீது நச்சுனு ஒரு குத்து இருக்கணும்...
சரிதானே.
ஆ..வ..ன செய்யவும்

நசரேயன் said...

கடைசியிலே சரி செஞ்சாங்களா இல்லையா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...
This comment has been removed by a blog administrator.
T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆவன செய்தார்கள் நசரேயன்

கோவி.கண்ணன் said...

:) நல்ல நகைச்சுவை !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கோவி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
Namakkal Shibi