Monday, March 7, 2011

அவளின்றி ஒரு அணுவும் அசையாது..


                                   (போட்டோ நன்றி -highdefinitionphotosandwallpapers.blogspot.co...)


இன்று மகளிர்தினமாம்

எண்ணுகையில்

நகைக்கவே தோன்றுகிறது

மண்ணில் தவழவிட்டவள் அவள்

வழி நடத்துபவள் அவள்

பாசத்தைப் பொழிபவள் அவள்

ஒவ்வொரு நிலையில்

தாய் மனைவி மகள் என

ஒவ்வொரு பெயரில்...

அவனின்றி ஒரு அணுவும் அசையாதாம்

அந்த அவனைப் பார்த்தவரில்லை..

என்னைக் கேட்டால்

பளீச்சென செப்பிடுவேன்

அவளின்றி ஒரு அணுவும் அசையாது

வாழ்வில் அவளின் அரவணைப்பு

வருடந்தோறும்

வசந்தத்தைப் பொழியும்

 அவளுக்கென எதற்குத் தனிநாளாம்

எண்ணுகையில்

நகைக்கவே தோன்றுகிறது
 

2 comments:

Chitra said...

வருடந்தோறும்

வசந்தத்தைப் பொழியும்

அவளுக்கென எதற்குத் தனிநாளாம்

எண்ணுகையில்

நகைக்கவே தோன்றுகிறது


.....ஒரு நாளாவது அவளது வேலைப்பளுவில் இருந்து அவளுக்கு ஓய்வு கொடுத்து, அவளின் சேவைக்கு நன்றி சொல்லவோ? :-)

ஹேமா said...

என்னதான் அவளைப் புகழ்ந்தாலும் இன்னும் ஏதோ ஒன்று இடித்தபடிதான் அவளை !