Wednesday, March 16, 2011

ஜெ ஏன் இந்த முடிவெடுத்தார்..





வை.கோ.வுடன் தொகுதி பங்கீடு முடியவில்லை.

மற்ற கூட்டணிக் கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டாலும் தொகுதிகள் ஒதுக்கப் படவில்லை.

இந்த நிலையில் ஜெ ஏன் அவசரப் பட்டு 160 தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்தார்.

என் அரசியல் நண்பர்..அ.தி.மு.க., வைச் சேர்ந்தவர் அவருடன் உரையாடுகையில் அவர் தந்த தகவலை அப்படியே தருகிறேன்.

ஜெ ..தி.மு.க., வால் காங்கிரஸ்,பா.ம.க., வி.சி.க.,விற்கு ஒதுக்கப் பட்ட தொகுதிகளைப் பார்த்ததும் இம் முடிவெடுத்தார் என்கிறார்.

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ள பல தொகுதிகளில் ..அ.தி.மு.க., வெற்றி பெறும் வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.ஆகவே ம.தி.மு.க., வின் 4 சதவிகித ஓட்டுவங்கி தனக்கு ஆதரவாய் இல்லையெனினும் பரவாயில்லை என முடிவெடுத்தார்.ஆனால்..இது கம்யூனிஸ்ட்கள், தே.மு.திக., வையும் அதிருப்திக்கு உள்ளாக்கும் என நினைக்கவில்லை.

ஆனாலும்..இனி எதற்கும் அம்மா தயார் 'என்றார்.

இது எவ்வளவு தூரம் உண்மையாய் இருக்கக் கூடும் என தெரியவில்லை.

ஆனால்..ஒன்று மட்டும் புரிகிறது..

அம்மாவின் அகங்காரம் இன்னும் குறையவில்லை..என்று.

21 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உண்மைதான்..
இது ஒன் மேன் ஆர்மி..
அம்மாவின் முடிவுதான் இறுதியானது..


இருந்தாலும் மதிமுக-வின் விஷயத்தில் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது..

Pranavam Ravikumar said...

I am not with anyone. But today happened to listen to a talk between two while I was travelling to office. They were on stand that Amma has less chance.Lets see...!

Unknown said...

நண்பரே உடன் பிறந்த குணம் போகாது கட்டை வேகும்வரை

ராஜ நடராஜன் said...

//அம்மாவின் அகங்காரம் இன்னும் குறையவில்லை..என்று.//

இனி வரும் காலம் ஜெயலலிதாவிற்கு ரிவிட் அடிக்கும் காலமா?

Thenammai Lakshmanan said...

டி வி ஆர்.. நான் யாருக்கும் சார்பில்லை

ஆனால் ஒர் கட்சித்தலைவருக்கு முடிவெடுக்கும் அதிகாரமில்லையா..

ELANGOVAN said...

@Mrs.தேனம்மை லெக்ஷ்மணன்

ஒர் கட்சித்தலைவருக்கு முடிவெடுக்கும் அதிகாரm irruku! appadina kootani vekkama thaniyavae ninnukalam!

if you want an alliance to win, you have to consult with all the leaders.

ஜீவன்சிவம் said...

அவரின் ஆளுமை திறன் பாராட்டுதலுக்குரியது தான், ஆனால் எடுத்தேன் கவிழ்த்தேன் போக்கு, அடுத்தவர்களை மதியாமை, அரசியல் தலைவர்களுக்கே இந்த கதி என்றால் தொண்டனின் கதி, மக்களின் கதி
அதோ கதி தான்

பூங்குழலி said...

இதில் ஏதும் communication gap இருக்கும் என்று நினைக்கிறேன் .தொகுதிகள் பங்கீடு முடியாதது தெரியாமல் போயிருக்கலாம் (சொல்ல எவருக்கும் வாய்ப்பு இல்லாமல் ? ஊடகங்கள் கூட்டணி கட்சிகள் அதிருப்தி என்று அலறிக் கொண்டிருக்க ஒரு முழுநாள் ஆகியிருக்கிறது ,அதிமுக தரப்பு செயல்பட ).

முன்பு ஜெ சபாநாயகருக்கு எழுதியதாக சொல்லப்பட்ட ராஜினாமா கடிதம் வெளியானதும் நினைவுக்கு வருகிறது .பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

ஆனாலும் எதிர்பார்த்ததை விட மோசம் .ஏன் என்பதற்கு அகங்காரம் மட்டும் காரணம் என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை .அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் .

இந்த தேர்தலில் தங்கள் கூட்டணியை உறுதி செய்ய எடுத்துக் கொண்ட முயற்சிகளை விட ஆளும் கட்சி இந்த கூட்டணி ஏற்படாமல் இருக்க அரும் பாடுபட்டதாக தெரிகிறது .இந்த நேரத்திலும் பக்குவமாக நிலைமையை கையாண்ட விஜயகாந்த் பாராட்டுக்குரியவர் .

அமுதா கிருஷ்ணா said...

எதற்கு இவ்வளவு அலட்டல்.வானத்தில் இருந்து குதித்தவரா என்ன?

Unknown said...

வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதில் குளறுபடி செய்த தோழி மீது அம்மா காண்டு !
(நட்பில் விரிசல், தோட்டத்தைவிட்டு வெளியேற தோழி முடிவு # சாரதி)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சௌந்தர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Kochuravi

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
விக்கி உலகம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ராஜ நடராஜன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி தேனம்மை லெக்ஷ்மணன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி part time jobs

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Elangovan

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஜீவன்சிவம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
பூங்குழலி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
அமுதா கிருஷ்ணா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
ஆகாயமனிதன்..