Friday, December 9, 2011

தமிழ்க் கவிஞன்






நான்

தமிழ்க் கவிஞன்தான்...

உணர்ந்து கொண்டேன்..

வாழும் போது

புறக்கணிக்கப் படுகிறேனே...

இறந்ததும்

தரணி முழுதும்

போற்றப்படுவேன்...



7 comments:

SURYAJEEVA said...

பார் அது தீ

ரிஷபன் said...

வாழும் போது

புறக்கணிக்கப் படுகிறேனே...

இறந்ததும்

தரணி முழுதும்

போற்றப்படுவேன்...

நையாண்டியை ரசித்தேன்..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஹி..ஹி...ஹி...

goma said...

இருக்கும்போது எதுவும் எடுபடாது

ஹேமா said...

கவிஞர்களோடு கூட இருப்பது வறுமையும் ஒன்று.அதனால் அவர்கள் சொல்வது எடுபடுவதில்லை.அதோடு அன்று ஊடகங்கள் குறைவு.அதனாலேயே புறக்கணிப்பு நிலைமை இருந்திருக்கிறது.இன்றைய கவிஞர்களுக்கு இந்த நிலைமை குறைவு.அதுவும் சினிமாக் கவிஞர்கள் நிலைமை அமோகம்.வாழும்போதே பணமும் புகழும் கிடைக்கிறது.இல்லாவிட்டால் கொலை வெறிப்பாட்டை உணர்ந்து ரசித்து உச்சத்தில் கொண்டு வந்து விடுவார்களா.உங்கள் இந்தக் கவிதை செல்லாது !

T.V.ராதாகிருஷ்ணன் said...

கவிஞர்களுக்கெல்லாம் திரைப்படத்தில் எழுத சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.
அப்படியே சிலருக்குக் கிடைத்தாலும்...எழுதும் அனைவரும் செல்வந்தர்கள் ஆவதில்லை..
இன்னமும் வறுமையில் வாடும் கவிஞர்கள் பல உண்டு.
ஆமாம்.. கொலவெறி எழுதுபவர் எல்லாம் கவி என எப்படி சொல்கிறீர்கள் ஹேமா..

ஹேமா said...

ஐயா...நான் சும்மாதான் உங்களைக் கிண்டினேன்.இன்று பாரதியார் நினைவு தினத்தில் உங்கள் ஆதங்கம் சரியானதே.ஒத்துக்கொள்கிறேன் !

கொலைவெறியை நானும் நீங்களும்தான் ஒத்துக்கொள்ளவில்லை.அதுக்கு அழகு தமிழில் ஆரோக்யமான கவிதை வரிகளுக்குக் கிடைக்காத விருது கிடைத்திருக்கிறதே.Why this kolaiveri !