Thursday, June 12, 2014

குறுந்தொகை - 10




மருதம் திணை...- பாடலாசிரியர்- ஓரம்போகியர்


யாய் ஆகியளே விழவு முதலாட்டி;

பயறு போல் இணர பைந் தாது படீஇயர்

உழவர் வாங்கிய கமழ் பூ மென் சினைக்

காஞ்சி ஊரன் கொடுமை

கரந்தனள் ஆகலின், நாணிய வருமே.

                      - ஓரம்போகியர்


( தோழி  நேர்மையற்ற தலைவன் பற்றி உரைத்தது).
                 
                                 
தலைவனுக்கு சந்தோஷத்தையும், செல்வத்தையும் கொணர்ந்த தலைவி, உழவர்கள் தங்கள் வயலில் விளைந்த பயற்றின் கொத்தைப் போன்ற பூங்கொத்தில் உள்ளன வாகிய பசிய பூந்தாதுக்கள், தங்கள் மேலே படும்படி உழவர்கள் வளைத்த கமழ்கின்ற பூக்களை உடைய மெல்லிய கிளைகளைக் கொண்ட, காஞ்சி  ஊரைச் சேர்ந்த தலைவன் செய்த கொடுமையை பிறரிடம் உரைத்தால் அவனுக்கு அவமானம் என மறைத்தாள்.(மறைமுகமாக தலைவன் பரத்தையிடம் செல்வதையே கொடுமை என சொல்லப்பட்டதாக கொள்ள வேண்டும்)

No comments: