Sunday, June 15, 2014

குறுந்தொகை - 12



செய்யுள் ஆசிரியர்  - ஓதலாந்தையார் (பாலைத் திணை)

(தலைவன் வெளியூர் சென்றுள்ளான்..அவன் போகும் பாதை குறித்து , பயணம் குறித்து தலைவி கவலைப் படுகிறாளாம்.ஆனால் அவள் தலைவனை நினைத்து வருந்துவதாக ஊர் கூறுவது பேதமையாம்.தோழியிடம் இதை தலைவி சொல்கிறாளாம்)

இனி செய்யுள்  -


   
  எறும்பி யளையிற் குறும்பல் சுனைய
   
  உலைக்க லன்ன பாறை யேறிக்
   
  கொடுவி லெயினர் பகழி மாய்க்கும்
   
 கவலைத் தென்பவவர் சென்ற வாறே

 அதுமற் றவலங் கொள்ளாது
   
 நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே.

                            -ஓதலாந்தையார்.


தலைவன் சென்ற வழி, எறும்பு புற்றுகள் போல சின்ன சின்னதாய் இருக்கும் சுனைகள்.உலையில் வைத்த கல் போல வெயிலில் கொதிக்கும் பாறை. அதில் ஏறி செல்ல வேண்டும்.கொடிய வில்லை ஏந்திய அம்பு எய்பவர்கள் வழியில் உண்டு.
அதனால் என் கவலை அவர் சென்ற வழி குறித்துத்தான்.அதை உணராது, உதாசீனமாக தலைவனை பிரிந்ததால் வருந்துவதாக ஊர் என்னன்னவோ சொல்லி கஷ்டத்தைத் தருகிறது.

(எறுப்பு புற்று போல சுனைகள்
உலையில் வைத்த கல் போல பாறை 
உவமைகளை ரசியுங்கள்)

No comments: