Wednesday, June 18, 2014

குறுந்தொகை - 15



பாலை திணை  - பாடியவர் ஔவையார்

பாடல் -

பறை பட, பணிலம் ஆர்ப்ப, இறைகொள்பு
தொல் மூதாலத்துப் பொதியில் தோன்றிய
நால் ஊர்க் கோசர் நல் மொழி போல,
வாய் ஆகின்றே-தோழி!-ஆய் கழல்
சேயிலை வெள் வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே.

                          -ஔவையார்
உரை-

ஆண்களின் காலில் அணியும் அணியான கழல் அணிந்த, சிவந்த இலை போன்ற , வெள்ளி போன்ற வேலையும் உடைய தலைவனுடன், வரிசையாய் முன் கையில் வளையல்கள் அணிந்த பருவப்பெண்ணின் நட்பு.(எப்படிப்பட்டதாம் தெய்யுமா?)

பறைகள் ஒலிக்கவும் சங்குகள் ஊதவும், பழைய முதிய ஆல மரத்தடியில் கூடிய பொதுமன்றத்தில் நான்கு
பேர் கூடியிருக்கையில் கோசர்கள் உரைத்த சூளுரையை நிறைவேற்றியது  போன்றதாம்.


(மோகூர் பழையன் என்பானுக்கு மோரியர்களுடனான போரில் உதவுவோம் என உறுதி கொடுத்து கோசர்கள் சொன்ன சொல்லை காப்பாற்றினார்களாம்  - அதுவே சொல்லப்பட்டுள்ளது)

உவமை இல்லாத குறுந்தொகை பாடல்களே கிடையாது.

No comments: