Wednesday, June 11, 2014

குறுந்தொகை _ ஒன்பதாம் பாடல்



செய்யுள் ஆசிரியர் - கயமனார் (நெய்தல் திணை)

யாய் ஆகியளே மாஅயோளே-

மடை மாண் செப்பில் தமிய வைகிய

பெய்யாப் பூவின் மெய் சாயினளே;

பாசடை நிவந்த கணைக் கால் நெய்தல்

இன மீன் இருங் கழி ஓதம் மல்குதொறும்

கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும்

தண்ணம் துறைவன் கொடுமை

நம் முன் நாணிக் கரப்பாடும்மே.

                 - கயமனார்
(தோழி, நேர்மையற்ற தலைவனிடம் தலைவி பற்றி உரைத்தது)

மாந்தளிர் நிறத்தினளான தலைவி, அலங்கார  பூச்சடியில். வைத்துள்ள யாரும் சூடா பூ போல மெலிந்து வாடினாள்.பசுமை இலைகள் உள்ள தண்டுடைய நெய்தல் மலர்கள்,பல மீன் இனங்கள் உடைய பெரிய உப்பங்கழியின் அலைநீர் பெருகுகையில் குளத்தில் மூழ்கும் மகளிரின் கண்கள் போல தோன்றும் குளிர்ந்த நீர்த்துறைக்கு உரிய தலைவனின் கொடுஞ்செயலை மற்றவரிடம் சொல்லாமல் மறைத்துவைப்பாள்.

No comments: