Saturday, June 7, 2014

குறுந்தொகை -ஐந்தாம் பாடல்



நெய்தல் திணை

குறுந்தொகை ஐந்தாம் பாடலை எழுதியவர் நரிவெரூ உத்தலையார்


அதுகொல் தோழி காம நோயே
வதிகுரு குறங்கும் இன்னிழற் புன்னை
உடைதிரைத் திவலை அரும்புந் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே.

தலைவனைப் பிரிந்த தோழியை காம நோய் வாட்டுகிறதாம்.அதைச் சொல்லும்போதும் அவனது நாட்டௌச் சிறப்பைச் சொல்லி சொல்லுகிறாள்.

புன்னை மரங்கள் நிறைந்த இடம்.நீர்ப்பரப்பான பிரதேசம்.அதனால் நாரைகள் அலைமோதும் இடம்.கரையை மோதும் அலைகள்.அந்த அலை அடிக்கையில் அதனால் சிறப்புறும் நீர்ப்பரப்பு நிறைந்த கடற்கரையாம்.கற்பனையைப் பாருங்கள்.

இனி செய்யுளுக்கான பொருள்

நாரைகள் உறங்கும் இடமாகிய இனிய நிழலையுடைய புன்னை மரங்களை கொண்டவனும், கரையை அலைகள்மோதும்போது உடைகின்ற நீரால் வீசப்படும் துளியால் அரும்புகின்ற கண்ணுக்கு இனிதாகியநீர்ப்பரப்பையுடைய மெல்லிய கடற்கரையையுடைய எம் தலைவன் பிரிந்ததால் பல இதழ்களையுடைய தாமரை மலரைப் போன்ற என்கண்கள் காம நோயால் வாடுகிறது (என் தோழியே )

குருகு-நாரை

No comments: