Tuesday, June 3, 2014

குறுந்தொகை......




தமிழ்க்கடலில் மூழ்கினால் கிடைக்கும் முத்துகள் சொல்லிடங்கா.
கற்றது கை மண்ணளவு என்பர்...
அக் கைமண்ணளவு இல்லையெனினும்...நான் அறிந்தவற்றை....நான் படித்ததை...நான் கேட்டதைக் கொண்டு குறுந்தொகைப் பாடல்களை அனைவரும் ரசிக்கும் வண்ணம்
இலக்கியச் சுவையை சுவைக்கும் வண்ணம் எளிமைப்படுத்தி எழுத இருக்கிறேன்...

குறுந்தொகை ....................

நான்கு முதல் எட்டு வரையிலான அடிகளைக் கொண்ட ..கடவுள் வாழ்த்து நீங்களாக 400 பாடல்களைக் கொண்டது குறுந்தொகை.இதில் 391 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். ஏனைய 10 பாடல்களைப் பாடியவர்கள் யாரெனத் தெரியவில்லை.கடவுள் வாழ்த்தைப் பாடியவர் பெருந்தேவனார்.கடவுள் வாழ்த்து..முருகப்பெருமானைக் குறித்து..அதைப் பார்ப்போம்..

தாமரை புரையுங் காமர் சேவடிப்
பவழத் தன்ன மேனித் திகழொளிக்
குன்றி யேய்க்கும் உடுக்கைக் குன்றின்
நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேற்
சேவலங் கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே

இதற்கு அர்த்தம்..

தாமரை மலரைப் போன்ற சிவந்த காலடிகள்.பவழம் போல சிவந்த உடல்..உடலிலிருந்து பரவித் திகழும் ஒளி..குன்றிமணி போல சிவந்த ஆடை..குன்றை இரண்டாய் பிளக்குமாறு நெடிய வேல்படை.இவற்றுடன் சேவல் சின்னம் பொறித்த கொடியைக் கொண்டவனாகிய முருகப்பெருமான் காத்து நிற்பதால் இந்த உலகம் இனிய நாட்களை பெற்று விளங்குகிறது.

அடுத்த பதிவில் அடுத்த பாடலைப் பார்ப்போம்..

4 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல பகிர்வு.

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கம் நன்று... தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி தனபாலன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி முனைவர் இரா.குணசீலன்