Thursday, June 26, 2014

குறுந்தொகை - 23



நம் மக்கள் ஜோசியத்தில் நம்பிக்கைக் கொண்டவர்கள்.ஜாதகத்தை எடுத்துக் கொண்டு..எனக்கு எப்போது வேலை கிடைக்கும், வெளிநாடு செல்லும் சான்ஸ் இருக்கிறதா, திருமணம் எப்போது...என எப்போது இறப்பு என அறிவது வரை பல வினாக்களுக்கு விடையை ஜோதிடர் மூலம் அறிய விரும்புவர்.தவிர்த்து, கிளி ஜோசியம், கோல் வைத்துக் கொண்டு பாடும் குறி சொல்லுபவர் ஜோசியம் என பலவகை உண்டு.அதற்கு பரிகாரங்களும் சொல்வர்.

வெளிநாட்டிலும், குறிப்பாக உலக கால்பந்து போட்டியில் எந்த அணி வெல்லும் என ஆமை ஜோசியம் கூட நாம் அறி
வோம்.

இது சங்ககாலத்திலும் உண்டு.

தலைவனிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடால்..தலைவி பிரம்மை பிடித்தது போல இருக்கிறாளாம்.அவள் நிலை எப்போது சரியாகும் என நெற்குறி பார்ப்பவள் மூலம் பார்க்கிறார்களாம்.
இனி செய்யுள் -

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் ஔவையார்


அகவன் மகளே யகவன் மகளே
 
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
 
அகவன் மகளே பாடுக பாட்டே
 
இன்னும் பாடுக பாட்டே, அவர்

நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.

                   -ஒளவையார்.

உரை-

தெய்வங்களை அழைத்துப் பாடும் குறி சொல்லும் மகளே , சங்கு மணியினால் ஆன கோவையைப் போன்ற வெண்மையாகிய கூந்தலை உடைய  அகவல் மகளே!பாட்டுகளைப் பாடுவாயாக.(நீ பாடிய) தலைவனது நெடிய குன்றத்தை புகழ்ந்துபாடிய பாட்டை மீண்டும் பாடுவாயாக (என தோழி உரைக்கிறாள்)


(குறிப்பு-  (அகவல் மகள் - கட்டுவிச்சி -முறத்தில் நெல்லை வைத்துத் தெய்வங்களைப் பாடி எண்ணிப் பார்த்துக் காணும் குறி).இவளைப் பிற்காலத்தார் குறத்தி என்று கூறுவர்




தலைவனால் வேறுபாடு என்பதால்..அவன் சார்ந்த மலை பற்றி பாடச் சொல்வதாகக் கொள்ளலாம்)

No comments: