Friday, June 20, 2014

குறுந்தொகை - 17



பாலைத் திணை - பாடலாசிரியர் பேரெயி முறுவலார்

மாவென மடலு மூர்ப பூவெனக்
   
குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப
   
மறுகி னார்க்கவும் படுப
   
பிறிது மாகுப காமங் காழ்க் கொளினே.

                        - பெரெயி முறுவலார்


(தலைவியிடம் சொல்லி அழைத்துவா என்று அவன் தோழியிடம் கூறும்போது தோழி மறுக்காமல் இருக்க இச் செய்தியைச் சொல்கிறான். அழைத்துவராவிட்டால் மடலேறுதல் ஊர்வழக்கம் என்று சொல்லி அச்சுறுத்துகிறான்.)

உரை-
காமநோயானது முத்ர்வுற்றால், பனைமடலையும் ,குதிரை எனக் கொண்டு ஆடவர் அதில் ஏறுவர்.குவிந்த அரும்பை உடைய எருக்கம் பூ மாலையையும் அடையாள மாலையைப் போல தலையில் அணிந்து கொள்வர்.வீதியில் இதைக் காணும் பெரியோர் அவனுக்கு அவளை மணம் முடிக்குமாறு அவள் பெற்றோரிடம் கூறுவர்.

(மடலேறுதல்; மடல் என்பது இங்குப் பனைமட்டையைக் குறிக்கும். பனைமட்டைகள் கறுக்குகள் கொண்டவை. பல்லுப் பலாக இருக்கும் அந்தக் கறுக்குகள் உடம்பில் படும்போது கிழித்து இரத்தம் வரும். இந்தப் பனைமட்டைகளால் குதிரை உருவம் செய்வர். அதில் தலைவன் ஏறிக்கொள்வான். தோழர் குதிரையை இழுத்துக்கண்டு தலைவி வாழும் ஊரில் தெருத்தெருவாகச் செல்வர். தலைவன் தான் விரும்பும் தலைவியின் பெயர் எழுதிய ஓவியம் ஒன்றை வைத்திருப்பான். அதனைப் பார்த்த ஊர்மக்கள் தலைவன் தலைவி உறவைப் பற்றிப் பேசுவர். அவனுக்கு அவளை மணம் முடிக்குமாறு அவளது பெற்றோரிடம் கூறுவர்.

No comments: