Monday, June 16, 2014

குறுந்தொகை- 13




குறிஞ்சித் திணை - பாடலாசிரியர்  கபிலர்

மாசறக் கழீஇய யானை போலப்
பெரும்பெய லுழந்த விரும்பிணர்த் துறுகல்
பைத லொருகலை சேக்கு நாடன்
நோய்தந் தனனே தோழி
பசலை யார்ந்தநங் குவளையங் கண்ணே.

                               =கபிலர்

தலைவி, ,தலைவன் பிரிந்தமையைத் தோழியிடம் கூறல்

உரை=

அழுக்கு நீங்கக் குளிப்பாட்டிவிட்ட யானையைப் போல இணைந்திருக்கும் பெரிய மலைப்பாறை மழையில் நனைந்திருக்கையில்,அதில் கலைமான் ஏறி படுத்திருக்கும்.நாட்டுக்காரன் அவன்.அவன் அவளிடம் நன்றாக பசப்பு மொழிகளைப் பேசிவிட்டு பிரிந்து சென்றான்.அதை எண்ணுகையில் அவளது கண்கள் ஒளி மங்கிப் பசலை பாய்ந்து அவனைத் தேடுகின்றன.(என்கிறாள் தலைவி)

No comments: