Monday, June 23, 2014

குறுந்தொகை - 20



மனைவியை விட்டு பிரிந்து வெளியூரில் குடும்ப பொருளாதாரத்திற்காக வேலை செய்யும் கணவர்மார்கள் இன்று ஏராளம். தனியாக என்னை விட்டு செல்ல வேண்டாம்..நானும் உங்களுடன் தான் இருப்பேன் என் அடம் பிடிக்கும் மனைவியரும் உண்டு.
இது போன்ற பிரிவுகள் இப்போது மட்டுமல்ல சங்க காலத்திலும் உண்டு.அப்படி பிரிந்து சென்ற கணவன் குறித்து தலைவி சொல்வது போல அமைந்த பாடல் இது.

இனி பாடல்-

பாலை திணை- ஆசிரியர் கோப்பெருஞ் சோழன்


அருளும் அன்பும் நீக்கி, துணை துறந்து,

பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,

உரவோர் உரவோர் ஆக!

மடவம் ஆக, மடந்தை, நாமே!

              -கோப்பெருஞ் சோழன்

உரை-

அருளும் அன்பும் ஒதுக்கி, த்னது துணையைவிட்டு, பொருள் ஈட்டும் முயற்சியில் பிரிந்து சென்றுள்ள தலைவன், அறிவுடையவனாயின், அதுபோல பிரிபவர் அறிவுடையவராகவே இருக்கட்டும்..ஆனால்..அப்பிரிவை துறக்க முடியாத நாம்(பெண்கள்) அறிவில்லாதவராகவே இருந்துவிட்டு போவோம் தோழியே!

(மனைவியை விட்டு பிரிந்து செல்வது அறிவுடையார் செயல் அல்ல)

No comments: