Tuesday, June 17, 2014

குறுந்தொகை - 14



குறிஞ்சித் திணை- ஆசிரியர்- தொல் கபிலர்

(தலைவன் சொல்வதுபோல அமைந்த பாடல்)

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள்...இப்பாடலில் தலைவன் தனக்கு அமைந்த மனைவி குறித்து நாணுகிறானாம்...அதற்கு என்ன காரணம்? பாடலாசிரியர் என்ன் அசொல்கிறார்...பார்ப்போம்.. 

 அமிழ்து பொதி செந் நா அஞ்ச வந்த
 வார்ந்து இலங்கு வை எயிற்றுச் சில் மொழி அறிவையைப்
 பெறுகதில் அம்ம யானே பெற்றாங்கு
 அறிகதில் அம்ம இவ் ஊரே மறுகில்,
 நல்லோள் கணவன் இவன் எனப்
 பல்லோர் கூற, யாஅம் நாணுக சிறிதே.
                                 
                                -தொல் கபிலர்
    

பாடல் உரை-

சிவந்த நாக்கு, பயப்படும்படியான அழகிய சிறிய பற்கள், குறைந்த பேச்சு இவை அமைந்த இந்தப் பெண்ணை நான் அடைந்த போது, இந்த ஊரே என்னை இந்த நல்லவன்தான் இவள் கணவன் என்னும் போது கொஞ்சம் வெட்கம் ஏற்படுகிறது

No comments: