Tuesday, December 2, 2008

இந்திய எல்லையில் பாகிஸ்தான் இராணுவம்..

மும்பை தீவிரவாதிகள் பிடியிலிருந்து விடுபட்டு..நொண்டி..நொண்டி பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது.

பிடிபட்ட பயங்கரவாதி 5000 பேரை கொல்ல திட்டம் வைத்திருந்தோம் என சொல்கிறான்.இப்பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டது தெரிய வந்திருக்கிறது.மேலும் தாஜ் ஓட்டலில் இருந்த தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்கு பேசியுள்ளதாகவும் தெரிகிறது.பாகிஸ்தான் விசாரணையில் ஒத்துழைக்க அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு,கடைசியில் அந்த அதிகாரியையும் அனுப்ப இசையவில்லை.

இப்படிப்பட்ட நெருக்கடியான வேலையில், எல்லையில் பாகிஸ்தான் ஒரு லட்சத்திற்கும் மேலான இராணுவத்தினரை குவித்துள்ளதாக தெரிகிறது.ஒவ்வொரு முறையும்,நாம் வெற்றிக்கனியையே இவர்களுடன் போரின்போது சுவைத்து வருகிறோம்.அத் தருணங்களில் பாகிஸ்தான் தந்திரமாக,போர் நிறுத்தம் செய்து பேச்சு வார்த்தைக்கு அழைக்கும்.

பட்டது போதும்.இம்முறை பாகிஸ்தானை ஓட ஓட விரட்டுவோம்.அவர்கள் பிடித்து வைத்திருக்கும் காஷ்மீரப் பகுதியையும் மீட்போம்..என அனைத்து அரசியல் தலைவர்களும் ஒரு மித்த கருத்துடன்,ஒற்றுமையாக செயல் பட வேண்டிய நேரம் இது.

11 comments:

மணிகண்டன் said...

எதுல படிச்சீங்க இந்த செய்திய ?

கோவி.கண்ணன் said...

//இம்முறை பாகிஸ்தானை ஓட ஓட விரட்டுவோம்.அவர்கள் பிடித்து வைத்திருக்கும் காஷ்மீரப் பகுதியையும் மீட்போம்..என அனைத்து அரசியல் தலைவர்களும் ஒரு மித்த கருத்துடன்,ஒற்றுமையாக செயல் பட வேண்டிய நேரம்//

இந்த சமயத்தை நழுவ விட்டுவிடக் கூடாது. இல்லாவிடில் அவ்வப்போது வந்து 100 - 200 பேரை போட்டுத் தள்ளுவதை வழக்கமாக்கிக் கொல்வானுங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

///மணிகண்டன் said...
எதுல படிச்சீங்க இந்த செய்திய ?///

எந்த செய்தியைச் சொல்கிறீர்கள் மணி, எல்லையில் ராணுவ குவிப்பையா? அப்படியானால்..அது 30ஆம் தேதி மாலை சன் செய்தி அறிக்கையில் கூறப்பட்ட/காட்டப்பட்ட செய்தி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...
இல்லாவிடில் அவ்வப்போது வந்து 100 - 200 பேரை போட்டுத் தள்ளுவதை வழக்கமாக்கிக் கொல்வானுங்க.//


ஆம்..கோவி வெறுப்பாய் இருக்கிறது..வன்முறைக்கு..வன்முறைதான் பதில்

குடுகுடுப்பை said...

இவனுங்கல திருத்தவே முடியாது. சுவத்துல முட்டுனா மண்டைதான் உடையும்.

குடுகுடுப்பை said...

எனக்கென்னவோ போர் மேல் நம்பிக்கை இல்லை.

வேறு வழியும் எனக்கு தெரியல.

நசரேயன் said...

/*பாகிஸ்தானை ஓட ஓட விரட்டுவோம்.அவர்கள் பிடித்து வைத்திருக்கும் காஷ்மீரப் பகுதியையும் மீட்போம்
*/
அப்படியே இலங்கைக்கும் ஒரு காட்டு காட்டுவோம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// குடுகுடுப்பை said...
இவனுங்கல திருத்தவே முடியாது. சுவத்துல முட்டுனா மண்டைதான் உடையும்.//


உண்மைதான் குடுகுடுப்பை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி குடுகுடுப்பை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சிவா

T.V.ராதாகிருஷ்ணன் said...

////நசரேயன் said...
/*பாகிஸ்தானை ஓட ஓட விரட்டுவோம்.அவர்கள் பிடித்து வைத்திருக்கும் காஷ்மீரப் பகுதியையும் மீட்போம்
*/
அப்படியே இலங்கைக்கும் ஒரு காட்டு காட்டுவோம்///

:-)))))