Friday, January 28, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (28-1-11)





உலக மக்கள் தொகையில் இரண்டாமிடம். நிலப்பரப்பில் ஏழாம் இடம்.அதிக இளைஞர்கள் எண்ணிக்கையில் முதலிடம்,வற்றாத நதிகள்,இயற்கை வளங்கள் என உலக நாடுகளில் உச்சத்தில் நம் நாடு இருக்கிறது.

(அதனால் தான் அத்தனை ஊழல்களையும் நம்மால் சுமக்க முடிகிறதோ!!)

2)பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை இருந்த இரண்டு நாட்களில் டாஸ்மாக் சரக்கும்165 கோடிக்கு விற்பனையாகியுள்ளது

((ஒரு ரூபாய்க்கு அரிசி ரேஷனில் போட்டுவிட்டு..டாஸ்மாக்கில் குடிமகனிடம் வசூலித்த பணத்தை மானியமாக தருகிறதோ அரசு)

3)ரூபாய் ஒன்றுக்கு அரிசி வழங்குவதால் தமிழக அரசுக்கு சென்ற ஆண்டு 3136 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

((முந்தைய செய்திக்கும்..இதற்கும் உள்ள தொடர்பு இப்போது தெரிகிறதா?)

4)170 மொழிகளில் விக்கி அகரமுதலிகள் உள்ளன.தமிழ்மொழி உலக மொழிகளின் வரிசையில் முதல் பத்து இடத்தில் இருப்பதால் தமிழும் இடம் பெற்றுள்ளது.இதில் 1,92,000 சொற்கள் உள்ளன

5)சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் கௌரவத் தூதர் பொறுப்பிலிருந்து மூத்த நடிகர் அமிதாப் பச்சன் நீக்கப் பட்டுள்ளார்.சென்ற ஆண்டில் நடத்தப்பட்ட சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்க முடியாது என அவர் அறிவித்ததே இதற்குக் காரணம் என்று சொல்லப் படுகிறது

6)கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்றி அறிய தடை இருந்தாலும், அதையும் மீறி ஸ்கேன் மூலம் குழந்தையின் பாலினத்தை அறிந்து பெண் குழந்தையாக இருந்தால் கருவிலேயே அழித்து விடும் கொடுமை நடக்கிறது.நாடு முழுதும் ஆண்டு தோறும் 7 லட்சம் பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப் படுவதாக ஒரு தகவல் அறிக்கை கூறுகிறது.

7)நொடிக்கு நொடி

கைமாறும் பணமே

உனக்கு

இத்தனை பொய் முகங்களா

கறுப்பு பணம்

சட்டவிரோத பணம்

வரி ஏய்த்த பணம்

பயங்கரவாதிகள் பணம்

உன் உண்மை முகம்

வியர்வை சிந்தி

உழைத்த

எங்களுக்கான பணமே

6 comments:

MANO நாஞ்சில் மனோ said...

நல்லாயிருக்கு....

தமிழ் உதயம் said...

பணம் - கவிதை நன்றாக உள்ளது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Mano

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி தமிழ் உதயம்

ஹேமா said...

கவிதை அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா