Thursday, June 19, 2014

குறுந்தொகை -16



பாலைத் திணை - பாடலாசிரியர் பெருங்கடுங்கோ

தோழி கூற்று
(பொருள் ஈட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்த காலத்தில், ‘அவர் நம்மை நினைப்பாரோ, நினையாரோ’என்று கருதிக் கவலையுற்ற தலைவியை நோக்கி, ‘‘அவர் சென்ற பாலை நிலத்தில் ஆண் பல்லி பெண் பல்லியை அழைத்தலைக் கேட்டு நின்னை நினைந்து மீண்டு வருவர்’’என்று தோழி கூறி ஆறுதல் அளித்தது)

செய்யுள்-

உள்ளார் கொல்லோ தோழி கள்வர்தம்
   
பொன்புனை பகழி செப்பங் கொண்மார்
   
உகிர் நுதி புரட்டு மோசை போலச்
   
செங்காற் பல்லி தன்றுணை பயிரும்

அங்காற் கள்ளியங் காடிறந் தோரே.

                        பெருங்கடுங்கோ

 உரை -

கள்வர்கள் .இரும்பினால் செய்யப்பட்ட தம் அம்பை, நகனியிலே புரட்டும் ஒலியைப்போல், செம்மையான கால்களை உடைய ஆண் பல்லியானது, தன் துணையாகிய பெண் பல்லியை அழைத்தற்கு இடமாகிய கள்ளிகளை உடைய பாலையைக் கடந்து பொருள் ஈட்ட சென்ற தலைவன் உன்னை நினைக்காமல் இருப்பாரா? திரும்பி வருவார் (என ஆறுதல் சொல்கிறாள் தோழி)_

(பொருள் ஈட்ட தலைவன் சென்றுள்ளான்..அவளில்லா நிலையில் தலைவன் அவளை நினைப்பாரோ..மாட்டாரோ என கலையுற்றவளிடம்...ஆண் பல்லி பெண்பல்லியை அழைக்கும் ஒலி கேட்டு உன்னை நினைத்து உடன் திரும்பி வருவார் (என்கிறாள் தோழி)
.

1 comment:

”தளிர் சுரேஷ்” said...

அருமையான பகிர்வு! நன்றி!