Thursday, August 19, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (20-8-10)



ஜப்பானில் டோக்கியோவில் 6 மாடிகள் கொண்ட கட்டிடம் ஒன்று பூமிக்கு அடியில் கட்டப்பட்டு
உள்ளது.இதன் உயரம் பூமிக்கு அடியில் 600 அடிகளாகும்

2)புகழ் பெற்ற சதுரங்க விளையாட்டை இந்தியாதான் கண்டுபிடித்தது.இந்த விளையாட்டில் நான்கு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியன் ஒரு தமிழர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

3)மலைச்சாரல்கள் நிறைந்த இடம் நார்வே..இங்கு நள்ளிரவில் பார்த்தால் கூட சூரிய வெளிச்சம் இருப்பது போல மிக அழகாக இருக்குமாம்.கரை ஓரத்தில் கடல் ஆழமாக அழகாக இருப்பதால், இதைப் பார்த்து ரசிக்கவே வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலர் வருகின்றனராம்

4)இங்கிலாந்து நீதிபதிகள் குற்றவாளிக்கு மரணதண்டனை என்று தீர்ப்பு எழுதும்போது கறுப்புத் தொப்பியை அணிவார்கள்

5)சமீபத்தில் நடந்த ஈரோடு புத்தகக் கண்காட்சியில் 'எழுத்து என்னும் கருவறை' என்ற தலைப்பில் பேசிய வை.கோ.தன் உரையில் 168 எழுத்துல மேதைகளின் பெயர்களைச் சொன்னாராம்.இவ்வளவு பெயரையும் நினைவுப்படுத்தி சொல்வது எவ்வளவு கடினம்..கலைஞர் பெயரையும் குறிப்பிட்டாராம்..வைகோ...(என்னைப்பொறுத்து இழப்பு இரண்டு பக்கமும் என்றே தோன்றுகிறது)

6)ராஜபக்ஷே அரசை போர்க்குற்றவாளி என 40க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியுள்ளன.ஆனால் இந்தியா ராஜபக்ஷேக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை.

7)சென்ற வாரத்தில் நான் படித்த இடுகைகளில் எனக்குப் பிடித்த இடுகை இது..தமிழா தமிழா வின் இந்த வார மகுடம் இதற்கே..வாழ்த்துகள் சிவராமன் (பைத்தியக்காரன்)

12 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

"தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுவையாக உள்ளது... அறிந்திராத பல தகவல்கள்...

பகிர்விற்கு நன்றி..

Unknown said...

//ராஜபக்ஷே அரசை போர்க்குற்றவாளி என 40க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியுள்ளன.ஆனால் இந்தியா ராஜபக்ஷேக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை.//

நியாயமாக இதில் இந்தியாவையும் சேர்த்து குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் ..

க.பாலாசி said...

நல்ல பகிர்வு அய்யா...

//(என்னைப்பொறுத்து இழப்பு இரண்டு பக்கமும் என்றே தோன்றுகிறது)//

ம்ம்ம்ம்...

vasu balaji said...

/ராஜபக்ஷே அரசை போர்க்குற்றவாளி என 40க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியுள்ளன.ஆனால் இந்தியா ராஜபக்ஷேக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை.//

கல்ல கட்டிக்கிட்டு கடல்ல குதிக்க முடியுமா:))

a said...

Thanks for sharing many the new info.

நசரேயன் said...

//இந்தியா ராஜபக்ஷேக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை.//

ம்ம்ம்

Chitra said...

அருமை, ஐயா!

சிநேகிதன் அக்பர் said...

சுவையாக உள்ளது ஐயா.

Saran said...

உள்ளேன் அய்யா

ஹேமா said...

//ராஜபக்ஷே அரசை போர்க்குற்றவாளி என 40க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியுள்ளன.ஆனால் இந்தியா ராஜபக்ஷேக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை.//

ஹேமா said...

//ராஜபக்ஷே அரசை போர்க்குற்றவாளி என 40க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியுள்ளன.ஆனால் இந்தியா ராஜபக்ஷேக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை.//

இது எங்கள் தூரதிஸ்டம் !

எல்லா விஷயங்களுமே அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி