Tuesday, August 17, 2010

திரைப்பட இயக்குநர்கள் - 3 எல்.வி.பிரசாத்




திரைப்படங்கள் என்றால் கண்டிப்பாக எல்.வி.பிரசாத்தின் பங்கு ஞாபகம் வருவதைத் தடுக்க முடியாது.17-1-1908ல் ஆந்திராவில் பிறந்த அக்கினேனி லட்சுமி வர பிரசாத் ராவ் தான் எல்.வி.பிரசாத் என்னும் நடிகர்,தயாரிப்பாளர், இயக்குநர் ஆவார்..இவர் சாதாரணமான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.

நடிக்கும் ஆசையோடு 1930ஆம் ஆண்டு பம்பாய் சென்றவர்க்கு ,,அந்த ஆசை எளிதில் நிறைவேறவில்லை.Star of the East என்னும் மௌனப் படத்தில் ஒரு சிறு வேடம் கிடைத்தது.பின்னர் 1931ல் வெளியான ஆலம் ஆரா என்னும் முதல் பேசும் படத்தில் சிறு பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார்.

பின்னர் காளிதாஸ், பக்த பிரகலாதா ஆகிய படங்களில் நடித்தவருக்கு அலிஷா என்னும் ஹிந்திப் பட இயக்குநரிடம் உதவி இயக்குநர் பணிபுரியும் சந்தர்ப்பம் கிடைத்தது.எட்டு ஆண்டு காலம் உதவி இயக்குநர் ஆகியும் , ஏதும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

1949ல் இயக்குநர் ஆகும் ஆசை நிறைவேறியது.'மனதேசம்' என்னும் தெலுங்கு படத்தை இயக்கிநார்.என்.டி.ராமராவ் இப்படத்தில் தான் அறிமுகமானார்.1950ல் விஜயா பிக்சர்ஸ் சார்பில் 'சாவுகாடு' படம் இயக்கினார்...

பின்னர் சம்சாரம், மனோகரா (தமிழ்,தெலுங்கு,ஹிந்தி),ராணி (ஹிந்தி) ஆகிய படங்கள் இவரை பிரபல இயக்குநராக ஆக்கின.

1956ல் பிரசாத் ஸ்டூடியோ உருவானது..பின்னர் சில காலம் நோய்வாய்ப் பட்டார்.

பின்னர் 1956ல் பிரசாத் புரடக்சன்ஸ் உருவாக்கினார்.அவர் தயாரிப்பில் மிலன்,கிலோனா,சசுரால்,ஏக் துஜே கேலியே ஆகிய மாபெரும் வெற்றி படங்கள் உருவாயின.

நடிகர்,உதவி இயக்குனர்,தயாரிப்பாளராய் இருந்ததுடன்..இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என மும்மொழியிலும் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்கத்தில் வந்த தமிழ்ப் படங்கள்..மனோகரா,மிஸ்ஸியம்மா,கல்யாணம் பண்ணிப் பார்,பூங்கோதை,கடன் வாங்கிக் கல்யாணம்,மிஸ் மேரி,மங்கையர் திலகம்,தாயில்லாப் பிள்ளை(கலைஞர்..கதை,வசனம்),இருவர் உள்ளம் (கலைஞர்..கதை,வசனம்)ஆகியவை.

மூன்று மொழிகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 35 படங்களை இயக்கியுள்ளார்.

எல்.வி.பிரசாத் நடிப்பை பார்க்காதவர்களுக்கு ஒரு நினைவூட்டல்..

ராஜ பார்வை படத்தில்..கமல்,மாதவியின் காதலுக்கு உதவும் தாத்தா ஞாபகம் இருக்கிறதா...அந்த பாத்திரத்தில் நடித்தவர் இவர்தான்.

ஹைதராபாத்தில் கண் மருத்துவ மனைக்கு பல ஏக்கர்கள் இடத்தை அளித்தவர் இவர்.

இந்திய அரசின்'தாதா சாகேப் பால்கே' விருது பெற்றவர்.

இவர் 1994ல் அமரர் ஆனார்.

8 comments:

Vidhya Chandrasekaran said...

மிஸ்ஸியம்மா படம் ஜெமினி, சாவித்திரி நடிச்சதுதானே? எங்கம்மாக்கு பிடிக்கும். நிலான்னு ஒரு பாட்டுக்கூட வரும்ல.

Unknown said...

சினிமாவின் லெஜென்ட்...

vijayan said...

மங்கையர் திலகம் என்னும் காவியத்தை நெறிபடுத்தியதும் திரு.எல்.வி.பிரசாத் அவர்கள் தான்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வித்யா said...
மிஸ்ஸியம்மா படம் ஜெமினி, சாவித்திரி நடிச்சதுதானே? எங்கம்மாக்கு பிடிக்கும். நிலான்னு ஒரு பாட்டுக்கூட வரும்ல.//

ஆம்..அப்படப் பாடல்கள் அனைத்தும் அருமை..நீங்கள் சொல்வது..'வாரயோ வெண்ணிலாவே' என்ற பாடல்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//vijayan said...
மங்கையர் திலகம் என்னும் காவியத்தை நெறிபடுத்தியதும் திரு.எல்.வி.பிரசாத் அவர்கள் தான்.//

ஆம்..அப்படப் பெயர் விட்டுப் போயிற்று..பதிவில் சேர்த்து விட்டேன்..வருகைக்கு நன்றி விஜயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
சினிமாவின் லெஜென்ட்...//


ஆம்., நன்றி செந்தில்

Chitra said...

சுவாரசியமான தகவல்கள். ஒரு சாதனையாளரை பற்றி வாசிக்கும் போது, சந்தோஷமாக இருக்கிறது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Chitra