Saturday, February 27, 2010

குச்சியாய் நான்

பேருந்து பயணத்தில்

நடத்துநர்

பக்கத்துப் பயணி

மின்தூக்கியில் உடன் வருபவன்

தாமதமாக வந்ததால்

கண்டிக்கும் அதிகாரி

தெருவை கடக்கையில்

தென்படும்

காவல் துறை அதிகாரி

முகம் தெரியா

மற்றும் பலர் -என

கண்டு புன்னகைப்பவன்

வீடு வந்ததும்

தெரிந்த முகங்களிடம்

மறப்பதேன்


2) தடகளப் போட்டி

பாதி தூரம்

குச்சி எடுத்து

ஓடி வந்தவள்

இரண்டாம் கட்டத்தில்

உன்னிடம் தர

வெற்றி பெற்ற

உனை பாராட்டி

முதலாமவளை

மறந்த

குச்சியாய் நான்

24 comments:

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்குங்க...வாழ்த்துக்கள்...

மாதேவி said...

"மறப்பது"
இரண்டும் நல்லாக இருக்கிறது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கமலேஷ் said...
ரொம்ப நல்லா இருக்குங்க...வாழ்த்துக்கள்//

நன்றி கமலேஷ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// மாதேவி said...
"மறப்பது"
இரண்டும் நல்லாக இருக்கிறது//


நன்றி மாதேவி

Chitra said...

"குச்சியாய் நான்" ..........வித்தியாசமான கவிதை தொகுப்பு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Chitra

தமிழ் உதயம் said...

புன்னகைப்பதிலும் சுயநலம் காட்டுகிறொம். வேறென்ன.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமை அருமை அசத்தல் கவிதை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி தமிழ் உதயம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமை அருமை அசத்தல் கவிதை//


நன்றி Starjan

vasu balaji said...

இது வாத்தியார் கையில இருக்கிற குச்சியால்ல இருக்கு. சபாஷ்:)

சிநேகிதன் அக்பர் said...

அருமை சார். பிடிச்சிருக்கு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
இது வாத்தியார் கையில இருக்கிற குச்சியால்ல இருக்கு. சபாஷ்:)//

நன்றி வானம்பாடிகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
அருமை சார். பிடிச்சிருக்கு//

நன்றி அக்பர்

DREAMER said...

நல்லா இருக்குங்க...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி DREAMER

மதுரை சரவணன் said...

குச்சியாய் நான்/ அருமை . கவிதை நல்லா வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.

vidivelli said...

நல்லாயிருக்குங்க.............
அருமையான கவிதை......

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Madurai Saravanan said...
குச்சியாய் நான்/ அருமை . கவிதை நல்லா வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.//

நன்றி Madurai Saravanan

T.V.ராதாகிருஷ்ணன் said...

//vidivelli said...
நல்லாயிருக்குங்க.............
அருமையான கவிதை......//

நன்றி vidivelli

ராமலக்ஷ்மி said...

அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ராமலக்ஷ்மி

"உழவன்" "Uzhavan" said...

//
முதலாமவளை

மறந்த//
 
அப்படியெல்லாம் இல்லையே.. எல்லோருக்கும்தான் பரிசு தருவார்கள் : )

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி. Uzhavan" பரிசு பற்றி அல்ல கவிதை..குச்சி முதலாமவளை மறந்துவிடுகிறது..அதாவது தாயை மறந்துவிடுகிறோம் என்கிறேன்..அவ்வளவுதான்