Sunday, February 21, 2010

இந்த பதிவு..யாரையும்..எந்நிகழ்ச்சியையும் குறிப்பிடுவன அல்ல..

வானமெங்கும் சூரியன்

மலைகள் மீது

நீர்க்கடல் மீது

தரையின் மீது

தருக்களின் மீது

சுட்டெரிக்கிறது

ஆயினும் அதை

மிரட்டவோ

முறைக்கவோ

மன்னிப்புக் கேட்க வைக்கவோ

மாநிலத்தவர்க்கு இயலாது.


2) சற்றே மாற்றப்பட்ட பாரதியின் வரிகள் சில...

இரண்டு பாம்புகள் பேசிக்கொள்கின்றன

முதல்பாம்பு- உன்னுடன் இருப்பதில் எனக்கு இன்பமில்லை.உன்னால் என் வாழ்வு விஷமாகிறது

இரண்டாம் பாம்பு-உன்னுடன் இருப்பதால் ..எனக்கும் இன்பமில்லை..உன்னால் என் மனம் வேதனை அடைகிறது

முதல்- நீ என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்

இரண்டாவது- நீதான் மன்னிப்புக் கேட்க வேண்டும்

முதல்- இனி நீ எனக்குப் பகை

இரண்டாவது-நீ என் விரோதி

முதல்-நான் உன்னை அழிக்கப் போகிறேன்

இரண்டாவது-நான் உன்னைக் கொல்லப் போகிறேன்

ஒன்றுடன் ஒன்று அடித்துக் கொண்டு மடிகின்றன..

சூரியனின் பிரகாச ஒளி அவற்றில் பட்டு பிரகாசிக்கிறது.

36 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

ரெண்டுமே நிஜம் சார்...!

vasu balaji said...

எனக்கும் ஒன்னுமே புரியல:))

Unknown said...

நல்லா இருக்கு. என்னப்பத்தியும் இல்ல.

வரதராஜலு .பூ said...

//"இந்த பதிவு..யாரையும்..எந்நிகழ்ச்சியையும் குறிப்பிடுவன அல்ல.."//

அப்பிடியா, இல்ல போல இருக்கு

Anonymous said...

Super

சங்கர் said...

கொஞ்சம் புரியுது

இராகவன் நைஜிரியா said...

சூப்பரோ சூப்பர்...

ஊர் ரெண்டு பட்டால்....XXXX கொண்டாட்டம்.

XXXX ரெண்டு பட்டால் யாருக்கு கொண்டாட்டம்?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கொஞ்ச காலமா நெகடிவ் ஓட்டு விளாம இருத்திச்சில்ல அதுதான் இப்படி.,

மணிஜி said...

உள்குத்து!!

ஹேமா said...

இரண்டிலுமே சூரியனை மேம்படுத்திச் சொல்லியிருக்கிறீர்கள்.

கண்ணகி said...

புரியல...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
பிரியமுடன் வசந்த்
பாலா
ரவி ஷங்கர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
வரதராஜலு .பூ
சின்ன அம்மிணி
சங்கர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
இராகவன் நைஜிரியா
SUREஷ்
தண்டோரா

ராஜ நடராஜன் said...

சூரிய ஒளி அதிகமா போனா எவ்வளவு கஷ்டமின்னு அனுபவிச்சுப் பார்த்தா தெரியும்:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஹேமா said...
இரண்டிலுமே சூரியனை மேம்படுத்திச் சொல்லியிருக்கிறீர்கள்.//

வருகைக்கு நன்றி ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கண்ணகி said...
புரியல...//

இவ்வளவு நல்லவங்களா நீங்க

க.பாலாசி said...

புரிஞ்சிடுச்சு...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ராஜ நடராஜன் said...
சூரிய ஒளி அதிகமா போனா எவ்வளவு கஷ்டமின்னு அனுபவிச்சுப் பார்த்தா தெரியும்:)//


வருகைக்கு நன்றி ராஜ நடராஜன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//க.பாலாசி said...
புரிஞ்சிடுச்சு...//

வருகைக்கு நன்றி பாலாசி

சிநேகிதன் அக்பர் said...

கலக்குங்க சார் கலக்குங்க.

அகநாழிகை said...

TVR Sir, விடாதீங்க அடிச்சு விளையாடுங்க. நல்லா இருக்கு.

அன்புடன் அருணா said...

அப்பிடியா? ரைட்டு!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அக்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அகநாழிகை said...
TVR Sir, விடாதீங்க அடிச்சு விளையாடுங்க. நல்லா இருக்கு.//

நன்றி Vasu

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அன்புடன் அருணா said...
அப்பிடியா? ரைட்டு!//

நன்றி அருணா

Chitra said...

ஒன்றுடன் ஒன்று அடித்துக் கொண்டு மடிகின்றன..

சூரியனின் பிரகாச ஒளி அவற்றில் பட்டு பிரகாசிக்கிறது


.............. நாட்டு நடப்புத்தான்.

உண்மைத்தமிழன் said...

ஹா.. ஹா.. ஹா..

இந்தக் கவிதை மட்டும் எனக்கு வந்து தொலைய மாட்டேங்குதே..!!!

நான் மட்டும் எதுக்கு பதினைஞ்சு பக்கத்துக்கு கைவலிக்க டைப் செஞ்சு கட்டுரையா எழுதணும்.. இப்படி இருபது வரில கதையை முடிச்சிருவனே..

முருகா.. ஏண்டா இப்படி சோதிக்கிற..?

வெள்ளிநிலா said...

ஒருபயலையும் உடாதீங்க, உள்குத்த போட்டு தாங்குங்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Chitra said...
ஒன்றுடன் ஒன்று அடித்துக் கொண்டு மடிகின்றன..

சூரியனின் பிரகாச ஒளி அவற்றில் பட்டு பிரகாசிக்கிறது


.............. நாட்டு நடப்புத்தான்.//


வருகைக்கு நன்றி Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ஹா.. ஹா.. ஹா..

இந்தக் கவிதை மட்டும் எனக்கு வந்து தொலைய மாட்டேங்குதே..!!!

நான் மட்டும் எதுக்கு பதினைஞ்சு பக்கத்துக்கு கைவலிக்க டைப் செஞ்சு கட்டுரையா எழுதணும்.. இப்படி இருபது வரில கதையை முடிச்சிருவனே..

முருகா.. ஏண்டா இப்படி சோதிக்கிற..?//

அந்த முருகன் நான் நாலு வரிகள் எழுதினதுமே போதும்னு சொல்லிடறான்..ஆனா அவனுக்கு பிடிச்ச நீங்க எவ்வளவு எழுதினாலும் அவனுக்கு பத்தல

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வெள்ளிநிலா ஷர்புதீன் said...
ஒருபயலையும் உடாதீங்க, உள்குத்த போட்டு தாங்குங்க//

நன்றி ஷர்புதீன்

creativemani said...

சார்.. நான் லேட்டா வந்தேன்னு என்கிட்டே சொல்லாம விட்டுடாதீங்க..
என்ன விஷயம்?? :)

நசரேயன் said...

ஆமா.. ஆமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அன்புடன்-மணிகண்டன் said...
சார்.. நான் லேட்டா வந்தேன்னு என்கிட்டே சொல்லாம விட்டுடாதீங்க..
என்ன விஷயம்?? :)//


ஹா.. ஹா.. ஹா.. :)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
ஆமா.. ஆமா//

நன்றி நசரேயன்