Saturday, August 27, 2011

கலைஞரை எதிர்க்கிறாரா தங்கபாலு..




"நான் தூக்கு தண்டனை என்பதே கூடாது என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்துள்ளேன்.அது இந்த மூன்று பேருக்கும் பொருந்தும்.குற்றம் சாட்டப்பட்ட மூவரும் ஏற்கனவே 20 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டனர்.அவர்கள் சிறையில் இருந்ததை கருத்தில் கொண்டு, அவர்களை தூக்குதண்டனையிலிருந்து காப்பாற்ற நம்மால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசர அவசியமாகும்.தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் 3 பேரின் உயிரைக் காக்க உருக்கத்துடன் செயல் பட வேண்டும்.காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர் சோனியா காந்தியும் இந்தப் பிரச்னையில் அக்கறையுடன் 3 உயிர்களை காக்க முன்வர வேண்டும்.இந்த மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்'
மேற் சொன்னது கலைஞரின் அறிக்கை.
ஆனால்.. தமிழக காங்கிரஸ் தலைவர்(??!!) அறிக்கையைப் பார்ப்போம்..
மரணதண்டனை விவகாரத்தில் சில அரசியல் தலைவர்கள் சுயநலத்திற்காக போராட்டம் நடத்துகிறார்கள்.இதனால் ஜனநாயகத்திற்கு ஆபத்து வருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.தமிழ் உணர்வு எங்களுக்குத்தான் இருக்கிறது..நாங்கள் தான் தமிழர்கள், நாங்கள்தான் தமிழிற்கும், தமிழ் மொழிக்கும் சொந்தக்காரர்கள் என உரிமை கொண்டாடுகிறார்கள்..(கலைஞரைச் சொல்கிறாரா??!!)தமிழ் அவர்களுக்கு மட்டும் சொந்தமில்லை..எங்களுக்கும் அந்த உரிமை உண்டு.நாங்களும் தமிழர்கள்தான் (வெட்கம்..வெட்கம்)
அவர்களது குடும்பத்தினர் யாராவது ராஜிவ் காந்தியைப் போல படுகொலை செய்யப்பட்டிருந்தால்,அந்த கொலையாளியை விடுவிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்வார்களா? (என்ன ஒரு கொடூர எண்ணம்..)
சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும்..
என்றுள்ளார்..
இவர் அறிக்கையில்..ஆர்ப்பாட்டம், போராட்டம்..என்ற வார்த்தைகளை புத்திசாலித்தனமாக சேர்த்துள்ளார்.
இவர் கலைஞரை பற்றியும் சொல்கிறார்..ஆனால் வினா எழும்பினால்..'நான் கலைஞரைச் சொல்லவில்லை...ஆர்ப்பாட்டம் செய்பவர்களைத்தான் என்று சொல்லிக் கொள்ளலாம்....
தமிழக காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஜனநாயகத்தை அனுமதிக்காதவர் இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து வருவது பற்றி அச்சப்படுகிறாராம்.
நடப்பது நடக்கட்டும் கிழவனைத் தூக்கி மனையிலே வையுங்கள் என்ற கதைதான்.

3 comments:

காந்தி பனங்கூர் said...

தங்கபாலு யார் காங்கிரஸ் கட்சிக்கு வக்காளத்து வாங்க. அந்த ஆளே ஒரு டம்மி பீஸ். முதலில் தங்கபாலுவை தமிழகத்தை விட்டே விரட்ட வேண்டும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி காந்தி பனங்கூர்

aotspr said...

உங்கள் பதிவுக்கு நன்றி...

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com