Monday, August 29, 2011

படங்களின் தோல்வியும்..நடிகர்களின் சம்பளமும்..




2010-2011 ஆம் ஆண்டுகளில் வந்துள்ள பெரிய பட்ஜெட் படங்கள் மட்டும் 25.குறைந்தபட்சம் 20 கோடியில் தொடங்கி அதிக பட்சம் 120 கோடிகள் செலவு செய்து எடுக்கப்பட்டவற்றில் ஏறல்லுறைய 20 படங்கள் படு தோல்வியடைந்துள்ளன.
ஒரு படத்தின் வெற்றியோடு தங்களை இணைத்துக் கொள்ளும் நடிகர்கள் தோல்வியிலிருந்து விலகிக் கொள்கின்றனர்.
சில படங்களும்..அவை தயாரிக்க ஆன செலவும்..முக்கிய நடிகரின் சம்பளமும்..நஷ்டமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மன்மதன் அம்பு  பட்ஜெட் 45 கோடி ஹீரோ சம்பளம் 20 கோடி நஷ்டம் 20 கோடி
ராவணன்   பட்ஜெட் 45 கோடி ஹீரோ சம்பளம் 12 கோடி நஷ்டம் 30 கோடி
அசல்      பட்ஜெட் 35 கோடி ஹீரோ சம்பளம் 14 கோடி நஷ்டம் 20 கோடி
சுறா  பட்ஜெட் 40 கோடி ஹீரோ சம்பளம் 20 கோடி நஷ்டம் 20 கோடி
ஆயிரத்தில் ஒருவன் பட்ஜெட் 32 கோடி ஹீரோ சம்பளம் 8 கோடி நஷ்டம் 12  கோடி
வேங்கை 22 கோடி பட்ஜெட் ஹீரோ சம்பளம் 8 கோடி நஷ்டம் 10 கோடி
வானம் பட்ஜெட் 20 கோடி ஹீரோ சம்பளம் 8 கோடி நஷ்டம் 10 கோடி
அவன் இவன் பட்ஜெட் 18 கோடி ஹீரோ சம்பளம் 5 கோடி நஷ்டம் 7 கோடி

பெரிய ஹீரோக்கள் நடித்த சிங்கம்,பையா போன்ற ஓரிரெண்டு படங்களே பட்ஜெட் தாண்டி வெற்றி பெற்றுள்ளன.ஆதவன்,மதராச பட்டணம் ஆகியவை போட்ட முதலீட்டை எடுத்தன.
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ராம அண்ணாமலை என்ன சொல்கிறார்...
திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் 'விகிதாச்சார அடிப்படையில் சம்பளம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ஒரு படத்தின் பட்ஜெட் 30 கோடி என்றால் அதில் 10 கோடி ஹீரோவிற்கு போய் விடுகிறது.இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் தரும் மினிமம் கேரண்டித் தொகை கன்னாபின்னா வென ஏற்றப்படுகிறது.டிக்கெட் இலையை ஏற்றச் சொல்லி நெருக்கடி தரப்படுகிறது.டிக்கெட் விலை ஏறினால் மக்கள் வருவது பாதிக்கப் படுகிறது.கடைசியில் பாதிக்கப்படுவது திரையரங்கு உரிமையாளர்கள் தான்.
1990 களில் 2800 அரங்குகள் இருந்தன.இன்று 1300 ஆக அவை குறைந்துவிட்டன.95 விழுக்காடி டூரிங் தியேட்டர்கள் மூடப்பட்டு,கிராமங்களில் திரையரங்குகளே இல்லா நிலை எற்படுகிறது.காரணம்..தயாரிப்பு செலவுகளும்,நடிகரின் சம்பளமும் என்று விவாதிக்கப் படுகிறது.
கடந்த ஆண்டு 181 படங்கள் வெளியாகி 5 விழுக்காடே வெற்றி பெற்றன.
எங்கள் சங்க தீர்மானப்படி ஒரு கோடியும் அதற்கு மேலும் சம்பளம் கேட்கும் நடிகர்களுக்கு அவர்கள் மார்க்கெட் நிலவரம் பார்த்து ஒரு தொகை முன்பணமாக வழங்கப்படும்.படத்தின் வசூலில் இத்தனை விழுக்காடு என தீர்மானித்து பிறகு அதனைக் கொடுக்கலாம்.இதை இந்தத் துறையில் உள்ளவர்கள் பேசி முடிவெடுக்கலாம்,.சினிமாத் துறையின் மொத்த ரிஸ்க்கையும் நாங்களே ஏற்கிறோம்.நடிகர்களும் இதில் பங்கேற்க வேண்டும்.தங்கள் படம் வெற்றி பெற வேண்டும் என்ற அக்கறை இருந்தால் தான் தரமான படங்களில் நடிக்கும் முயற்சி ஏற்படும்.அது சினிமாவிற்கு நல்லது'...என்றுள்ளார்.
இதுபற்றி நடிகர் சத்தியராஜ் கூறுகையில்..'தயாரிப்பாளர்கள் தான் போட்டி போட்டு நடிகர்களின் சம்பளத்தை ஏற்றுகிறார்கள்.நடிகர் எவ்வளவு கேட்டால் என்ன? இவ்வளவுதான் தரமுடியும் ..என்று சொல்லுங்கள்.ஏற்கவில்லையெனில் வேறு நடிகரைப் பாருங்கள்.முடிந்தால் தயாரிப்பாளரும் நடிகரும் பேசி சதவீத டிப்படையில் சம்பளத்தை முடிவு செய்யுங்கள்'என்கிறார்.
ஒரே ஆறுதலான விஷயம்..சிறிய பட்ஜெட் படங்களான மைனா,களவாணி,தமிழ்ப்படம் ஆகியவை 4 கோடி செலவில் எடுக்கப்பட்டு 10 கோடிவரை வசூல் செய்துள்ளன.
ஆனால் பல நேரங்களில் சிறிய பட்ஜெட் படம் பர்ரிய ரிபோர்ட் வருவதற்குள் படம் தியேட்டரிலிருந்து வெளியேறிவிடுகிறது.இதற்கு உதாரணம்..தென் மேற்கு பருவக்காற்று, ஆரண்யகாண்டம் ஆகியவை.
சர்வாதிகாரத்தனங்கள் மிகுந்த தமிழ்த் திரையுலகை ஜனநாயகப் படுத்த வேண்டியது காலத்தின் கட்டாய.இந்த வேலையில் முனைந்திருக்கிறது திரையரங்கு உரிமையாளர் சங்கம்.கூடியவிரைவில் முறைகேடுகள் சீர் ஆகும் என நம்புவோம்.

(தகவல் ஆதாரங்கள்- இந்தியா டுடே)



5 comments:

Chitra said...

இதில் சொல்லப்பட்டு இருக்கும் கருத்துக்களை, ஹீரோக்கள் மற்றும் பிற தயாரிப்பாளர்களும் ஏற்று கொண்டு ஒரு நல்ல முடிவுக்கு வந்தால் நல்லதுதானே. கட்டுரை பகிர்வுக்கு நன்றிங்க.

goma said...

லாபம் வந்தால் கப் சிப் என்று போகும் தியேட்டர் உரிமையாளர்கள் நஷ்டம் வந்தால் மட்டும் ஏன் வாரிச் சுருட்டிகொண்டு வருகிறார்கள்....

Riyas said...

பகிர்வுக்கு நன்றி

mediaclub said...

thanks 4r ur information

aotspr said...

தகவலுக்கு நன்றி.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com