Tuesday, August 2, 2011

கறுப்புதான் நமக்குப் பிடிச்ச கலரு..




யாரும் யாருக்கும் இளைத்தவர் இல்லை என்ற நீதிக்கு ஒரு விஷயம்?
இது பாக்யா பத்திரிகையில் ஒரு வாசகரின் கேள்வி
இதற்கு பாக்யராஜின் பதில்..

அதாவது காட்டிலே வண்ணக்கிளி ஒன்னு கருப்பு காக்கையைக் கேலி செய்தது.கறுப்பு கறுப்பு என காக்கையை அவமதிச்சது.காக்கை வருத்தத்தோட..'கடவுள் என்னைப் படைத்தபோது கரண்ட் கட்டாகி இருக்கும்.அதற்கு நான் என்ன செய்ய?'ன்னு சலித்துக்கிச்சு.
அப்போ அங்கே வந்த வேட்டைக்காரன் ஒருத்தர் பல்வேறு வண்ணங்கள்லே மின்னிய அந்தக் கிளியை லபக்குன்னு பிடித்துக் கொள்ள கிளி சிக்கிருச்சு.காக்கை சொன்னது"நல்லவேளை நான் ஃப்ளாக் அண்ட் ஒயிட்' னு பெருமைப்பட்டது.
கிளியை எங்கே கொண்டு போகிறார் என தொடர்ந்து வேவு பார்த்தது.பாவம் கூட்டில் அடைத்து நம்மைப் போல் 'குட் மார்னிங் சொல்லு'ன்னு வேட்டைக்காரர் கிளியைப் பாடாய்ப் படுத்திட்டிருந்தார்.பூண்டிச் சுட்டு கிளியின் நாக்கில் வைத்து நாக்கைப் பதப்படுத்தினார்.வலி தாங்காமல் கிளி அலறியது.
அன்னைக்கு அமாவாசை.வேட்டைக்காரர் மனைவி வாசல் சுவரில் படையல் சோறை படைத்து 'காகா'ன்னு கூவி அழைத்தாள்.காகம் சிலிர்த்துக் கொண்டது.கிளியைப் பார்த்துச் சொன்னது, 'பார்த்தாயா..தன் பாஷையில் உன்னைப் பேச வைக்க உனக்கு நாக்கில் சூடு வைக்கிறான்.ஆனா அவர் சம்சாரமோ என் பாஷையில் என்னைக் கூப்பிட்டு சோறு வைக்கிறாள். I am Great ன்னு காகம் விருந்துண்டு பறந்ததாம்.

 டிஸ்கி - பாக்கியராஜின் இந்த பதில் எனக்குப் பிடித்திருந்ததால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்


10 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு:)!

Chitra said...

பகிர்வுக்கு நன்றிங்க.

மாசிலா said...

Very nice joke. Thanx.

ஹேமா said...

எனக்கும் பிடிச்ச நிறம் கருப்பு.அதற்கு விளக்கம் சிறப்பு !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ராமலஷ்மி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மாசிலா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

aotspr said...

நல்ல கதை.
Thanks,
Priya
http://www.ezdrivingtest.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Priya