Saturday, October 29, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (28-10-11)




இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஸ்டெம் செல்களில் இருந்து செயற்கை ரத்தத்தை தயாரித்து புதிய சாதனை படைத்துள்ளனராம்.இன்னும் 2 ஆண்டுகளில் மனித உடலில் செலுத்தி சோதிக்கப்பட இருக்கிறது.இந்த ரத்தம் பயன்பாட்டிற்கு வர 10 ஆண்டுகள் ஆகலாமாம்

2)இந்தியாவில் மணிக்கு 15 பேர் தற்கொலை செய்துக் கொள்கிறார்கள் என தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 16561 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனராம்.
இந்தியா முழுதும் 1,34,599 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனராம். வறுமை,வேலையில்லாத் திண்டாட்டம்,குடிப்பழக்கம்,வரதட்சணைகொடுமை ஆகியவையே இவற்றிற்குக் காரணம்

3)ஆர்.நடராஜ முதலியார் என்பவர் தயாரித்த கீசகவதம் என்ற திரைப்படம்தான் தமிழில் தயாரான முதல் படமாகும்.தமிழில் வெளியான காளிதாஸ் தான் முதல் பேசும்படம்

4)திமுக விற்கு பிரச்சாரம் செய்ததால் ஓய்வில் வைக்கப்பட்டுள்ள நகைச்சுவை நடிகருக்கு..முக்கியமான கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கி சந்தர்ப்பம் அளிக்குமாறு பூ நடிகையை மூத்த அரசியல்வாதி கேட்டுக் கொண்டுள்ளாராம்.

5)ஒருநாளைக்கு ஒரு மணி நேரம் மின்சாரம் இல்லையென்றாலே தவித்து விடுகிறோம் நாம்.ஆனால் உலகில் 160 கோடி மக்கள் இன்னும் மின்சாரம் இல்லாமல் வாழ்கிறார்களாம்

6)86.57 கோடி பேர் இந்தியாவில் செல்ஃபோன் வாடிக்கையாளராய் உள்ளனராம்

7)காவிரி நதிநீர் பிரச்னையில் அரசியல் பிரச்னைகளை நுழைக்காமல் தமிழக அரசு எடுக்கும் நல் முயற்சிகளுக்கு திராவிடர் கழகம் ஒத்துழைக்கும் என வீரமணி தெரிவித்துள்ளார்

8)ஜோக்ஸ் கார்னர்
 
பக்கத்து வீட்டு கணவன், மனைவி ஏன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்?
பிரபு தேவா,நயந்தாரா இடையே சண்டைன்னு இந்தம்மா சொல்றாங்க..அவர் இல்லைங்கிறார்..அந்த பேச்சு வார்த்தை முற்றி சண்டை

9)தீபாவளிக்கு தைக்கக் கொடுத்த சட்டையைப் போட்டுப் பார்த்துவிட்டு அந்த ஆள் ஏன் கத்துகிறார்.
 தையல்காரர் தைத்த சட்டை அவருக்கு ரொம்ப பிடிக்குதாம்..அதான் கத்தறார்
 சட்டை அவருக்குப் பிடிச்சால் சந்தோஷப்படாம ஏன் சண்டை போடறார்

10)உனக்கு இன்னிக்குப் பிறந்த குழந்தை அட்மிஷனுக்கு இப்பவே போகணுமா..எல்.கே.ஜி.அட்மிஷனுக்கா?
 இல்லை இல்லை ..பாட்டு டீச்சர் கிட்ட..பாட்டு சொல்லிக் கொடுக்க..அப்பத்தானே சூபர் சிங்கர் ஜூனியர்ல பாடமுடியும்

2 comments:

SURYAJEEVA said...

super
super
super

ஹேமா said...

தீபாவளி இன்னுமா தீபாவளி !