Thursday, October 20, 2011

சிபிஐ கண்டெடுத்த தங்கச் சுரங்கம்..




சிபிஐ ரெய்டில் கண்டுக்கப்பட்டவைகளின் லிஸ்ட் இது..

யார் இல்லத்தில் என்கிறீர்களா?

சுரங்க அதிபர் ஜனார்த்தன ரெட்டியின் இல்லத்தில்தான்..இந்தியா டுடே இதை..அலிபாபாவின் 40 திருடர்கள் பதுக்கி வைத்திருந்த புதையல் போல இருக்கிறது என்றுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் அவர்கள் கண்டதும்..கையகலப்படுத்தியுமான லிஸ்ட்

15 கிலோ தங்கத்தாலானவைரம் பதித்த சிம்மாசனம் மதிப்பு சுமார் 2.2 கோடிகள்

தட்டு, பாத்திரம்.ஸ்பூன்,கத்தி எல்லாம் தங்கத்தில் மதிப்பு 20.87 லட்சங்கள்

கோப்பை, ஆஷ்ட்ரே,லைட்டர் எல்லாம் தங்கத்தில்

தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு அடி உயர பாலாஜி சிலை..ஆறு அங்குலம் உயர பத்மாவதி அம்மாள் சிலை.100 க்கு 50 அடி அகல அறையின் பிற தங்க சிலைகள்

ஒரு கிலோ எடையுள்ள தங்க மணி

45 நெக்லஸ்,610 தங்க வளையல்கள்(வைரம் பதித்த 35 வளையல்)300 ஜோடி காதணி (வைரம் பதித்தது 75)1200 தங்க மோதிரம்.(வைரம் பதித்தது 100)

ஏராளமான பிரேஸ்லெட்,பழங்கால நகைகள்,பிளாட்டினம் நகைகள் (மதிப்பு தெரிவவில்லை இன்னும்)

30 கிலோ எடையுள்ள தங்க பாத்திரம்

பைகளில் வைக்கப்பட்டிருந்த 3 கோடி ரொக்கம்

ரோல்ஸ் ராய்ஸ்,ரேஞ்சோவர்,லேண்ட் ரோவர்,மெர்சிடஸ் பென்ஸ்,ஆடி, பி.எம்.டபிள்யூ,ஒரு டஜன் ஸ்கார்பியோக்கள்,பொலேரோக்கள் முதலிய கார்கள்

பெல்407 ரக ஹெலிகாப்டர்

அவரது சொந்த கணிப்பின் படி ஒரு நாள் வருமானம் 5 கோடியாம்

ரெட்டியின் சாம்ராஜ்ஜியத்தின் கீழ் கர்நாடகாவின் எட்டுத் துறைமுகங்களில் ஏற்றுமதி செய்யப்பட்ட சட்ட விரோத இரும்புத் தாது 2007-2010 வரை 29.8 மில்லியன் டன்.இதன் மதிப்பு 12228 கோடி

70 எம் எம் திரையும் கொண்ட உள் அரங்க நீச்சல் குளம்.எல்லா வசதிகளும் கொண்ட பார்.ஹோம் தியேட்டர் கொண்ட 3 மாடி வீடு மற்றும் அலுவலகம்

வெடிகுண்டு தாக்குதல் சமயத்தில் பதுங்கிக் கொள்வதற்கு இடமும் உள்ளதாகக் கூறப்படுகிறது.வீட்டுக்கு நேரே ஹெலிகாப்டர் தளம்.வீட்டிற்குள்ளும் ஒன்று.வீட்டைச் சுற்றி மூன்று அடுக்கு பாதுகாப்பு.பங்களாவிலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்திலிருந்தே சி சி டீ வி கண்காணிப்பு

அண்டா காகசம், அபூர்வா ஹூகும்..திறந்திடு சீசேம்..

டிஸ்கி- ஊழலை(??!!) எதிர்த்து அத்வானி ரத யாத்திரை சென்றுக் கொண்டிருக்கிறார்..

8 comments:

aotspr said...

மிகவும் அருமையான பகிர்வு.....
தொடர்ந்து எழுதுங்கள்.......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

SURYAJEEVA said...

அவர் அப்படி ரத யாத்திரை போனதால் தான், "தானே டிஸ்சார்ஜ் ஆன தானை தலைவன்" என்று எட்டியூரப்பா பேர் வாங்கி இருக்கிறார்... பொறுக்காதே..

Reva said...

India is a poor country... Now I know why..?
Reva

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி kannan

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி suryajeeva

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Revathi

ஜோதிஜி said...

தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்த விசயங்கள் உங்க மூலம்.

நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஜோதிஜி