Sunday, October 23, 2011

உள்ளாட்சித் தேர்தல்கள்...




மிகவும் கடினமான உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்டன.இப்போதெல்லாம் தேர்தல் ஆணையம் மீது பாராபட்சமாக இருப்பதாக புகார்கள் வருகின்றன.அதை உண்மையாய் இருக்கக்கூடுமா என்ற கோணத்தில் பார்த்தால்..அதற்கான சாத்தியக் கூறுகள் குறைவே.மேலும் ஆளும் கட்சியில் இருப்பவர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற முடியும்.திமுக ஆளும் கட்சியாய் இருந்த போதும் இதுதான் நடந்தது என்று கலைஞர் கூறியதிலிருந்து...பெரிய தவறுகள் ஏதும் இத் தேர்தலில் நடக்கவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.


எது எப்படியாயினும் இவ்வளவு பெரிய தேர்தலை பெரிய அசம்பாவிதம் ஏதும் இல்லாமல் நடத்தி முடித்த மாநில தேர்தல் ஆணயத்திற்கு நம் வாழ்த்துகள்.

இந்நிலையில் மாநகராட்சி நகராட்சி,நகர பஞ்சாயத்து,மாவட்ட பஞ்சாயத்து,பஞ்சாயத்து யூனியன் என பலநிலையில் தேர்தல்கள் நடந்துள்ளன.

உண்மையாக, இத் தேர்தல்கள் கட்சிகள் சார்பில் நடக்கக்கூடாது.அந்தந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள், அங்கு சமூக பணி ஆற்றுபவர்கள்,சமுக நல அமைப்புகள், பொதுத் தொண்டில் ஈடுபாடு உள்ளவர்கள் ஆகியவர்கள் தான் இது போன்ற தேர்தல்களில் , கூடியவரை போட்டியைத் தவிர்த்து தேர்ந்தெடுக்கப் பட வேண்டும்.

ஆனால்..இக்காலத்தில், கல்லூரி மாணவர்கள் தேர்தலிலிருந்து..தொழிற்சங்கத் தேர்தல் என எல்லாவற்றிலும் அரசியல் நுழைந்து விட்டப் பிறகு...இனித் தேர்தல் என்றாலே அரசியல்கள் தான் என்னும் நிலை உருவாகி விட்டது.

அந்தக் காரணங்களாலேயே..வன்மம், அட்டூழியம்,அடிதடி, கொலை போன்ற சம்பவங்கள் எல்லாம் ஏற்பட்டு விடுகின்றன.

இந்நிலையில், தேர்ந்தெடுக்கப் பட்ட அனைத்து உறுப்பினர்களும்..கட்சிப் பேதம் பார்க்காது..தங்கள் பகுதி நலனிலேயே குறியாக இருந்தால்..நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சியைக் காணலாம்.உண்மையான பஞ்சாயத் ராஜ் அமையும்.

மக்கள் நலன் ஏற்படும் எனில் கட்சி பேதத்தை மறந்து ஒற்றுமையாக செயல்பட்டால்தான்...இத் தேர்தல்களுக்கு மக்கள் வரிப்பணம் கோடிக்கணக்கில் செலவானது தவறில்லை என்ற நிலை ஏற்படும்.

இல்லையேல்..இவர்களைத் தேர்ந்தெடுத்த மக்கள் வழக்கம் போல ஏமாற்ற பட்டவர்களாகவே ஆகின்றனர்.

3 comments:

Chitra said...

இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

SURYAJEEVA said...

சரியாக சொன்னீர்கள்

Unknown said...

தங்கள் கூற்று முற்றிலும்
சரியானதே!
ஆனால் அவ்வாறு நடக்குமா
என்பது ஐயமே!

புலவர் சா இராமாநுசம்