Friday, October 7, 2011

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் (7-10-11)


நமது ஜனாதிபதிக்கு 6 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான ஹைடெக் பென்ஸ் கார் வாங்கப்பட்டுள்ளதாம்.ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வரும் காரைப்போல இந்தக் காரிலும் ஆங்காங்கே அதி நவீன ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளதாம்.ஒரு மினி மீட்டிங் நடத்தும் அளவிற்கு காரில் இடமுள்ளதாம்.
(ஜனாதிபதி ஒரு நாளைக்கு 32 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பதால் வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளார்..என்பதை நினைவில் கொள்க)

2)முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் வீட்டிற்கு 323 தொலைபேசி இணைப்புகளை சட்ட விரோதமாக வழங்கியது தொடர்பான ஃபைல்களை தொலைத் தொடர்புத்துறை சமர்ப்பிக்க வேண்டும் என சி.பி.ஐ., கேட்டுள்ளதாம்

3)2G விவகாரத்தால் ஏற்பட்ட பிரச்னையால் நான் ராஜினாமா செய்ய வந்தேனா இல்லையா என்று எனக்கு நினைவில்லை.எனக்கு ஞாபக மறதி உள்ளது என்றுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்
 (மறதி நோய் உள்ள ஒருவர்..இந்தியாவில் முக்கிய அமைச்சர் பதவியில் உள்ளார்...அது சரியா....சட்ட வல்லுநர் யாரேனும் தெரிவிப்பார்களா?)

4)குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் மூன்று நாள் உண்ணாவிரதத்திற்கு 60 கோடிகள் செலவழிக்கப் பட்டுள்ளதாம்..
  (நல்லவேளை உண்ணாவிரதத்திற்கே இவ்வளவு என்றால் உண்ணும்விரதமாயிருந்தால்...என்கிறார் காமன் மேன்)

5)முல்லைப் பெரியாறு விவகாரமே புரியவில்லை...அணை கட்டுவேன் என்கிறது கேரளா..தமிழகம் கூடாது என்கிறது..வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.அவ்வப்போது நிபுணர் குழுக்கள் வந்து அணையை பரிசீலிக்கிறது..இந்நிலையில் கேரளாவும் 663 கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்டப்படும் என்கிறது..
அட..தேவுடா...தலை சுற்றுகிறது.

6)கூடங்குளம் விவகாரமாக தில்லி சென்ற தமிழக அனைத்துக் கட்சியினர் குழுவினருக்கு வழக்கம் போல பிரதமர் வெண்டைக்காய் பதிலைச் சொல்லி அனுப்பியுள்ளார்.
 முடிவு..ஒரு அங்குலமும் இறங்கவுமில்லை..முன்னேறவுமில்லை.

7)ஒரு இணையத்தில் இப்படி ஜாப்ஸ் புகழப்பட்டுள்ளார்.:

உலகை மூன்று ஆப்பிள்கள் மாற்றியமைத்தன. ஒரு ஆப்பிள் ஏவாளை மயக்கியது. இன்னொரு ஆப்பிள் நியூட்டனை விழித்தெழ வைத்தது. 3வது ஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸ் கைவசம் இருந்தது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஸ்டீவ் ஜாப்ஸின் தயாரிப்புகள் உலகம் முழுவதும் அவர் பால் பெரும் அன்பையும், மரியாதையையும், ஆச்சரியத்தையும் வாரியிறைத்துக் கொண்டுள்ளன.

ஸ்டீவ் மரணச் செய்திக்கு ட்விட்டர் மூலம் லட்சக்கணக்கானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். விநாடிக்கு 10 ஆயிரம் ட்விட்டர்கள் அனுப்பப்பட்டு புதிய சாதனையும் படைக்கப்பட்டுள்ளது. இதுவரை இணையதள வரலாறு காணாத இரங்கல் தகவல் இது.