Monday, August 13, 2018

நாடகப்பணியில் நான் - 27

எங்களது 3ஆவது தயாரிப்பிற்கு புதுமையாக ஏதேனும் செய்ய எண்ணினோம்.அது என்ன? என சொல்வதற்கு முன்..
எனக்கு நண்பர்கள் கொடுத்த அதிர்ச்சியைச் சொல்கிறேன்.

"புதியதோர்" வெற்றிக்குப் பின்...என்னுடன் சேர்ந்து குழுவினைத் தொடங்கிய ஸ்ரீனிவாசன், நடித்து வந்த ஷங்கர், நாராயணன் ஆகியோர், அடுத்த நாடகத்தை பிரம்மாண்டமாய் தயாரிக்க எண்ணினர்.

ஏற்கனவே சபாவில் ஜேசுதாஸ் நிகழ்ச்சி மூலம் அனுபவப்பட்டிருந்த நான் அகலக்கால் வைக்க இசையவில்லை.ஆகவே அவர்கள் என்னை விட்டு பிரிந்தனர்.

நான் சற்று வருத்தப்பட்டாலும், அதிகமும் செலவில்லாமல் புதுமையாக தரமான நாடகத்தினை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.

முன் நாடகங்களில் நடித்த மணிபாரதி, ராம்கி மட்டுமே என்னுடன் இருந்தனர்.ராம்கி திறமையான நடிகர்.அவர் திறமையை வெளிக் கொணர ஆசைப்பட்டேன்.

பரத், அவர்களுடன் ஆலோசித்தேன்.."வீரபாகு" என்ற பாத்திரத்தினை மையப் படுத்தி ஒரு நாடகத்தை எழுதினார் பரத்.

வீரபாகு பாத்திரத்தை "ராம்கி" ஏற்றார்.நாடகத்தின் பெயர் "நெஞ்சங்கள் வாழ்த்தட்டும்"

பார்த்த நெஞ்சங்கள் அனைத்து வாழ்த்தின.

நாடகத்தின் அரங்க அமைப்பு எக்ஸலன்ட் மணி.ஒரு காலனியில்..தனித்து தனித்து மூன்று வீடுகள் செட்டில்.அடடா..இன்று நினைத்தாலும் அந்த அரங்க அமைப்பு என் கண்முன்னே என்னை ஆச்சரியப்பட வைத்தது.

ராம்கி,மணிபாரதி, நான் என அனைவருமே குறை சொல்ல முடியா நடிப்பு.

ஆனந்தவிகடனில் வீயெஸ்வி அவர்கள், விமரிசனம் எழுத தயாராய் நாடகத்தின் பெயரை வைத்த குழுவினரை நெஞசம் வாழ்த்துகிறது என எழுதியதுடன்..அனைத்து நடிகர்கள் நடித்திருந்தாலும் ராம்கி தனித்து நிற்கிறார் என்றும் மனம் திறந்து பாராட்டினார்.

நாடகம் 100 காட்சிகளைக் கடந்தது.

அடுத்து இந்நாடகம் திரைப்படம் ஆனால் சிறப்பாய் இருக்குமே! என்று சில நண்பர்கள் தூண்ட, எதைப்பற்றியும் எண்ணாத நானும் ,பரத்தும் திரைப்படமாக்க முடியுமா? என யோசித்தோம்..

அதற்கான எங்களது முயற்சி நிறைவேறியதா? அல்லது விழலுக்கு இறைத்த நீராயிற்றா? அடுத்த பதிவில் 

No comments: