Friday, August 31, 2018

நாடகப்பணியில் நான் - 44

அடுத்து பொதிகையில் என் நாடகம் செப்டெம்பர்11

இந்நாடகம் அமெரிக்காவில் டுவின் டவர் தாக்கப்பட்டதும், அதனால் உயிரிழந்த ஒரு இந்திய வாலிபன் பற்றியது.

இந்நாடகம் பற்றி ..

சென்னையில் ஒரு வயதான தம்பதிகள்.அவர்கள் மகன் அமெரிக்காவில்.

மாதா மாதம் அவர்களுக்கும் அங்கிருந்து பணம் அனுப்பிவிடுவான்.அவனுக்கு ஒரு திருமணம் செய்து விட வேண்டும் என பெற்றோர் எண்ணுகின்றனர்.

இந்நிலையில், அவர்கள் வீட்டினுள் பேயிங் கெஸ்டாக நுழைகிறாள் ஒரு பெண்.

அவளது அழகு, குணம் ஆகியவற்றைப் பார்த்த தம்பதிகள் அப்பெண்ணை தன் மருமகளாக ஆக்கிக் கொள்ள எண்ணுகின்றனர்.

ஆனால்..அப்பெண்ணோ..அமெரிக்காவில் உள்ள இவரது மகன் அவர்களுக்குத் தெரியாமல் மணம் செய்துக் கொண்ட பெண்.

செப்டெம்பர் 11 நிகழ்வில் அந்த டவரில் வேலை செய்து கொண்டிருந்த மகன் இறந்து விட, அப்பெண் வயதான தன் மாமனார், மாமியாரைக் காக்க அந்த விட்டினுள் வந்துள்ளாள்.

விஷயம் தெரியவர என்ன நடக்கிறது என்பதே மீதிக் கதை

இதில் சாய்ராம், மீரா கிருஷ்ணன், பிரியதரிசினி ஆகியோர் நடித்திருந்தனர்.

சமீபத்தில் சாய்ராமை நான் சந்தித்த போது..இக்கதையை என்னிடம் சொன்னார்.

உண்மையில்..என்னைவிட என் கதையை இன்னமும் அழகாக ஞாபகத்தில் வைத்துள்ள அக்கலைஞனை மனம் போற்றியது.

இதைவிட ஒரு எழுத்தாளனுக்கு வேறு என்ன மகிழ்ச்சி வேண்டும்.

No comments: