Monday, August 20, 2018

நாடகப்பணியில் நான் - 34

எங்கள் குழுவினரிடமிருந்து குடும்ப நாடகங்கள்தான் வேண்டும் என ரசிகர்கள் கூறிவிட்டார்கள் என்றேன் அல்லவா?

அத்னால், அவர்களைப் பிழியப் பிழிய அழ விட தீர்மானித்தேன்.

பிறந்தது "காயத்ரி மந்திரம்" நாடகம்
.
நாட்கம் முடிந்து பார்த்தால், விளக்கு வெளிச்சத்தில் சற்றே வெட்கத்துடன் அனைவரும் கண்களில் நீரை துடைத்துக் கொண்டிருப்பர்.

நாடகம் மாபெரும் வெற்றி
.
சென்னையில் "பாலாஜி ஃபைன் ஆர்ட்ஸ்" என்ற சபா திருவாளர்கள் சி எஸ் ராஜு, பி ஆர் ஸ்ரீனிவாசன் ஆகியோரை செயளர்களாகக் கொண்டு இயங்கி வந்தது.

இந்த சபா, ஒவ்வொரு வருடமும் சிறந்த நாடகத்திற்கான விருதினை வழங்கி வந்தது.

அதற்கான ஷீல்ட், கோப்பையை எனது சௌம்யா குழு அளித்திருந்தது.

எங்களது அந்த கோப்பை எங்களுக்கே காயத்ரி மந்திரம் நாடகத்திற்காக வழங்கப்பட்டது.அதை வழங்கியவர்அன்றைய பிரதம அழைப்பாளரான திரு எஸ் ராஜாராம் ஆவார்கள்

நாடகத்தில் நடித்த நடிகர்களை இங்கு கூறாவிடில், இப்பதிவு முற்று பெறாது.

மணிபாரதி, பிரேமா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்தனர்.ரிசர்வ் பேங் ஸ்ரீனிவாச ராவ் முக்கியமான குணசித்திர வேடமொன்றை ஏற்றார்.ரமேஷ், தேவிலலிதா, ஊட்டி குமார் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்தனர்.

ஈரோடு கவிதாலயாவும் இந்நாடகத்திற்கு விருதினை வழங்கியது.

மைலாப்பூர் அகடெமியுடன் எனக்கு சிறு மனஸ்தாபம் அந்த வேளையில் இருந்ததால், அந்த ஆண்டுக்கான அவர்கள் விருதுபோட்டியில் நான் கலந்து கொள்ளவில்லை

No comments: