Monday, August 27, 2018

நாடகப்பணியில் நான் - 41

வார்த்தை தவறிவிட்டாய் நாடக வெற்றிக்குப் பிறகு, எனது நாடகப்பணியில் மீண்டும் ஒரு சிறு தேக்கம்.
அலுவலகப் பணி, வீட்டில் சிறு சிறு பிரச்னைகள் , மகள் மேல் படிப்பு செலவுகள் போன்றவை என்னைக் கட்டிப் போட்டன.
இதனால் என் கற்பனை சற்று வறண்டது

இதனிடையே, வார்த்தை தவறிவிட்டாய் கதாநாயகி பாத்திரத்தை உல்டா செய்து, கதாநாயகன் இரட்டை வேடம் என மாற்றி, திரைப்படமாக்க தயாரிப்பாளரைத் தேடினேன்.

ஆனால்..ஒரு சில காரணங்களால் அது ஈடேறவில்லை.வெள்ளித்திரைக்கு முயன்ற எனது இரண்டாம் முயற்சியும் தோல்வி.

இந்நிலையில் கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் நிறுவனம் பொதிகை தொலைக்காட்சிக்காக "ஊரறிந்த ரகசியம்" என்ற தொடர் நிகழ்ச்சி நடத்தி வந்தது.அதாவது வாரம் ஒரு சிறுகதையைத் தயாரித்து அளித்து வந்தது.

நான் அந்நிகழ்ச்சிக்காக நான்கு சிறுகதைகளை எழுதிக் கொடுத்தேன்.

ஒவ்வொரு சிறுகதையும் முத்துகள்.

என்ன நானே சொல்கிறேனே என்று பார்க்கறீர்களா? காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என் கிறீர்களா?

அதுதான்..இல்லை..நான் ஒவ்வொரு நாடகத்தின் கதையைச் சொல்கிறேன்.அடுத்த பதிவிலிருந்து.நீங்கள் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்


No comments: