Saturday, August 25, 2018

நாடகப்பணியில் நான் - 39

வேதம் புதிதல்ல- நாடகத்தின் கதை.(எனது ஞாபக டயரியில் இருந்து,கைவசம் ஸ்கிரிப்ட் இல்லை)

மணி ஒரு ஏழை குருக்களின் மகன்.அவனது நண்பன் ஜோசப்.

மணிக்கு கிராமத்தில் பெண் பார்க்கப்படுகிறது.பெண்ணின் பெயர் வேதம்.பெண்ணைப் பார்க்க மணி தன் நண்பன் ஜோசப்புடன் செல்கிறான்.

பெண்ணை அவனுக்குப் பிடித்து விடுகிறது.அதை பெண்ணின் தந்தையிடம் கூறிவிட்டு மணி , நண்பனுடன் கிளம்ப இருக்கையில் இடி, மின்னல், மழை.

வேறு வழியில்லாமல் அந்த இரவு இருவரும் அவர்கள் வீட்டிலேயே தங்க நேர்கிறது.

நள்ளிரவு.மணி நல்ல உறக்கத்தில் இருக்க ஜோசப்பிற்கு தொடர் இருமல் ஏற்படுகிறது.தண்ணீர் குடிக்க வெளியே வந்து.."தண்ணீர்..தண்ணீர்" எனக் குரல் கொடுக்க ,தூங்கிக் கொண்டிருந்த வேதம் எழுந்து வந்து தண்ணீர் தருகிறாள்.அதைக் குடித்து முடித்த ஜோசப், வேதத்தைப் பார்த்து மயங்குகிறான்.அவளிடம் அத்து மீறுகிறான்.

விடியலில் மணியும், ஜோசப்பும் அவளது தந்தையிடம் விடை பெறுகின்றனர்.

அடுத்த சில மாதங்களில் கல்யாண ஏற்பாடுகள் நடைபெறும் சமயம், மணி மீண்டும்  வேதத்தின் வீடு வருகிறான்.
அப்போது வேதத்தின் தந்தை அழுதுக் கொண்டிருக்கும் வேதத்திடம் "யார் காரணம்? யார் காரணம்" என அடிக்கிறார்.
வேதம் 3 மாதக் கருவை சுமந்து கொண்டிருக்கிறாள்.
இதை கேள்யியுற்ற மணி, அதற்குக் காரணம் "நான் தான்" எனக் கூறி, அவளது தந்தையிடம் மன்ன்னிப்புக் கேட்கிறான்.
திருமணம் நடைபெறுகிறது.

இடைப்பட்ட காலத்தில் வேதம் ஒரு பெண் குழந்தையைப் பெற்று மணியிடம் ஒப்படைத்து விட்டு மறைகிறாள்.
மணி, தன் தந்தைக்கு அடுத்து அந்த ஊர் கோயில் குருக்கள் ஆகிறான்.

அவன் வசிக்கும் இடத்தில் ஒரு சர்ச் வருகிறது.வேதத்தின் மகள் அந்த சர்ச் பாதிரியின் மகனை விரும்புகிறாள்.மணியும் சம்மதித்து அந்தப் பையனின் தந்தையைக் காணச் செல்கிறார்.

சென்றவர்க்கு அதிர்ச்சி..

அந்த பாதிரி ஜோசப்.மணியின் பழைய நண்பன்.

வீட்டிற்குத் திரும்பிய மணி, தன் மகளிடம் அந்தத் திருமணம் நடக்காது எனக் கூறி, அதற்கான காரணம் அவள் காதலிப்பவன் அவனது சகோதரன் முறை என் கிறார்.
தானும் ஒரு கிறித்துவனுக்குப் பிறந்தவள்.தான் காதலித்தவன் தன் சகோதரன் என்று அறிந்தவள், அந்த மன வேதனையில் சர்ச்சிற்குச் சென்று அதே பாதிரியிடம் பாவமன்னிப்பு கோருகிறாள்.

ஆனால்...உண்மையில்..மணிக்கு இழைத்த துரோகத்தால் மனம் வாடி ஜோசப் அந்த ஊரிலிருந்து ஓடிவிடுகிறான்.தான் செய்த தவறால், தான் வேறு மணம் செய்து கொள்ளாமல் இருக்கிறான்.ஆனால் மனநிம்மதிக்காக ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கின்றான்.அக்குழந்தையே மணியின் பெண் காதலிக்கும் ஆள் எனத் தெரிகிறது.

இதுவே வேதம்புதிதல்ல கதை ஆகும்.

மணியாகவும் பின் வயதான கோயில் குருக்களாகவும் நான்.ஜோசப்பாகவும், பாதிரியாராகவும் மணிபாரதி, வேதம் ஆகவும் வேதத்தின் மகளாகவும் காவேரி.ராஜேந்திரன் ( டப்பிங்ஆர்டிஸ்ட் சங்கத்தின் தலைவராய் இருந்தவர்), குருக்களின் உதவியாக ராம்கி நடிகர்கள் பட்டியல் ஆகும்  

No comments: