Wednesday, August 22, 2018

நாடகப்பணியில் நான் - 36



"குடும்பம் ஒரு சிலம்பம்" நாடகம் மாபெரும் வெற்றி நாடகமாக அமைந்ததுடன் அதன் 100ஆவது காட்சிக்கு வந்திருந்தார் ஒரு பிரபலம்.
அவர்...
அனைத்து கலைஞர்களாலும் போற்றப்பட்டவர்/போற்றப்படுபவர்.

அத்துடன் இல்லாது, அந்த பிரபலம் என் நாடக உலகின் தந்தையாய்  நான் எண்ணி வருபவருக்கு சௌம்யா குழுவின் சார்பில் "நாடகப் பேரரசு" என்ற விருதினையும் அளித்து சிறப்பித்தார்,

வருகை புரிந்த பிரபலம் இயக்குநர் சிகரம் கே பாலசந்தர்.
விருதினைப் பெற்றவர் கார்த்திக் ராஜகோபால் ஆவார்.

என் வாழ்நாளில் என்னால் மறக்கமுடியா நாடக நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.

தவிர்த்து பின்னாளில்..

இயக்குநர் சிகரம் கேபி பற்றி நான் ஒரு புத்தகம் எழுதுவேன் என்றும்,

சங்ககாலம் முதல் இந்நாள் வரையிலுமான "தமிழ்நாடகமேடை தோற்றமும் வளர்ச்சியும்" குறித்து ஒரு நூல் எழுதுவேன் என்றும் அதை என் நாடகத்தந்தை ராஜகோபால் அவர்களுக்கு சமர்ப்பிப்பேன் என்றும் எண்ணவில்லை.

அந்த இரண்டு இமயங்களை அன்று மேடையில் அலங்கரித்து மகிழ்ந்தேன்.

அதே மேடையில் இயக்குநர் சிகரத்திடம் என் அடுத்த நாடகம் பற்றி சொல்லி, அத்ன் தலைப்பைச் சொன்னதும் வாய்விட்டு சிரித்தார்.

அவரை அப்படி சிரிக்க வைத்த அந்நாடகத் தலைப்பு என்ன?
அடுத்த பதிவில் 

No comments: