Tuesday, August 14, 2018

நாடகபப்ணியில் நான் - 28

நெஞ்சங்கள் வாழ்த்தட்டும் நாடகத்தை திரைப்படமாக்க முடியுமா? என நானும் ,பரத்தும் யோசித்தோம் அல்லவா? அது என்னவாயிற்று என்பதற்கு முன் ஒரு நிகழ்வு.

வீரபாகு என்ற பாத்திரத்தில் ராம்கி.கிட்டத்தட்ட அனைத்து காட்சிகளிலும் வருவார்.

நாடகம் அரங்கேறிய நாளுக்கு அடுத்த தேதி எர்ணாகுளம் சபாவில்.

கிளம்பிய நாள் அன்று ராம்கி டிரெயினைத் தவறவிட்டு விட்டார்.எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.அவ்வளவு காட்சி வசனங்களையும் யார் பேசமுடியும்? நடிக்க முடியும்? ஒரே நாளில்...

எர்ணாகுளத்தில் இறங்கியதுமே, ஒரு 60பக்க நோட்புத்தகத்தை வாங்கினேன்.தங்க வைக்கப்பட்டிருந்த ஓட்டல் அறையில், அப்புத்தகத்தில் வீரபாகுவிற்கான வசனங்களை மட்டும் குறிப்பெடுத்தேன்.அந்த பாத்திரம் எப்போதும், எதிலும் கணக்கு பார்க்கும் பாத்திரம் என்ற வசனத்தில் முதலில் ஓரிடத்தில் சேர்த்தேன்.

பின், நாடகம் முழுதும் கணக்கு எழுதுவது போல, வசனங்களைப் பார்த்து, பார்த்து பேசி நடித்தேன்.

வந்திருந்த ரசிகர்களுக்கும். சபா நிர்வாகிகளுக்கும் கூடத் தெரியாமல் அன்றைய நாடகம் வெற்றிகரமாய் அமைந்தது.

சரி..திரைப்பட விஷயத்திற்கு வருவோம்..

அந்நாடகத்தை திரைப்படமாக்கத் தீர்மானித்து, சுலோசனா,சுரேஷ், பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோரிடம் பேசி முடித்தோம்.

அந்நாளில் "காலிக் பிரதர்ஸ்" என்ற ஃபைனான்சியர்ஸ் இருந்தனர்.அவர்கள் படத்திற்கு ஃபைனான்ஸ் செய்வதாகக் கூறி..பதினைந்து    நாட்கள் கழித்து வரச் சொன்னார்கள்.

இடைப்பட்ட காலத்தில் இரு திரைப்படமான நாடகங்கள் வந்தன.(அந்நாடகங்கள் பெயரைச் சொல்ல மனம் ஒப்பவில்லை).இரண்டு படங்களும் படு தோல்வி.

அதனால், பதினைந்து நாட்கள் கழித்து ஃபைனாசியரைச் சந்தித்த போது அவர்கள் சாதகமான பதிலைக் கூற தயங்கினர்..மேற்குறிப்பிட்ட திரைப்படங்கள் தோல்வியால்.

ஆக, திரையுலக முயற்சி வெற்றிகரமான (!)தோல்வியில் முடிந்தது.

எல்லாமே நல்லதற்குத்தான் என்று மனதைத் தேற்றிக் கொண்டோம்.

No comments: