Tuesday, August 28, 2018

நாடகப்பணியில் நான் - 42

கிருஷ்ணசாமி அஸ்ஸோசியேட்ஸ் தயாரிப்பில். பொதிகையில் எனது 4 நாடகங்கள் ஒலி/ஒளி பரப்பானது என்று சொல்லிவிட்டு..அதன் கதைகளைச் சொல்வதாகக் கூறினேன் அல்லவா?

முதல்கதை- உறவு

கணவனை இழந்தவள் லட்சுமி.அவளது மகனை கஷ்டப்பட்டு, தனக்குத் தெரிந்த சமையல்வேலை செய்து வளர்த்தாள்.நல்ல கல்வியும் கொடுத்தாள்.மகன் நல்ல வேலையிலும் அமர்ந்தான்

மகனுக்கு திருமணம் நடந்தது.மருமகள் வந்துவிட்டாள்.ஆனால் அன்று முதல் லட்சுமிக்கு பிரச்னைகளும் வர  ஆரம்பித்தது.

தினமும், மருமகளுக்கும், மாமியாருக்கும் சண்டை.மகனோ நிம்மதி இழந்தான்.

அன்றும் அப்படிதான்...

அவன் அலுவலகம் கிளம்பும் சமயம் சண்டை.மனைவி சொல்லிவிட்டாள் "இதோ பாருங்க..ஆஃபீசை விட்டு திரும்பி வந்ததும் ஒரு முடிவெடுங்க.ஒன்னு, நான் இந்த வீட்ல இருக்கணும் இல்ல உங்கம்மா இருக்கணும்" என வெட்டு ஒன்று துண்டு இரண்டாய்ச் சொல்லி விட்டாள்.

அதையே எண்ணியபடி இருந்தவனை, அவனது பக்கத்து இருக்கை நண்பன் காரணம் விசாரிக்க, இவனும் உண்மையைச் சொன்னான்.

நண்பன் - இதற்கா வருத்தப்படறே! கவலைபப்டாதே...எனக்குத் தெரிந்த ஒரு ஆதரவற்றோர் இல்லம் உள்ளது..அதில் உங்கம்மாவை சேர்த்துவிடலாம்

மகனும் அடுத்த நாள் அம்மாவை இல்லத்திற்கு அழைத்துச் சென்றான்.இல்ல நிர்வாகியோ, அம்மாவிற்கு மகன் இருப்பதால், அவர் அனாதை இல்லை என சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டார்.

இந்நிலையில் அம்மா, தன் மகனை சற்று வெளியே இருக்கச் சொல்லிவிட்டு ஆதரரவற்றோர் இல்ல நிர்வாகியிடம் "ஐயா! என்னைத் தெரியலையா உங்களுக்கு.25 ஆண்டுகளுக்கு முன் விதவையாய் இந்த வீட்டிற்கு வந்த எனக்கு தைரியத்தை வூட்டி..என் கையில் ஒருவயது குழந்தையையும் கொடுத்து, வாழ்வில் எனக்கு ஒரு பிடிப்பை ஏற்படுத்திக் கொடுத்தீர்களே! அன்று என் கையில் நீங்கக் கொடுத்த குழ்ந்தைதான் 26 வயது வாலிபனாய் வெளியே நிற்பது.உண்மையில் நான் ஒரு அனாதை.என்னை இந்த இல்லத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்றாள்.

அம்மா, என்ன பேசப்போகிறாள் தன்னை வெளியே அனுப்பிவிட்டு என்று எண்ணிய மகன் அம்மா சொன்னதைக் கேட்டதும், ஓடி வந்து"அம்மா1 என்னை அம்ன்னிச்சிடு"ன்னு அம்மா காலில் விழுந்தான்

அம்மாவாக வத்சலா ராஜகோபாலும், மகனாக அச்சமில்லை கோபியும், நண்பனாக மாப்பிள்ளை கணேஷும் , மருமகளாக டிவி நடிகை சீதாவும் நடித்தனர்

அடுத்த கதை அடுத்த பதிவில்

No comments: