Sunday, August 19, 2018

நாடகப்பணியில் நான் -33

எனது சௌம்யா குழுவினரின் 6ஆவது நாடகம் "இதயம்வரை நனைகிறது"

நகைச்சுவை சற்று தூக்கலாக அமைந்த நாடகம்.

ஆனதாண்டவபுரம் ஆதிகேசவலு என்ற நகைச்சுவை பாத்திரத்தை முன்னணியாகக் கொண்ட நாடகம்.

எனது குழுவில் நகைச்சுவை வேடத்தை செய்ய நடிகர்கள் இருந்தாலும்...குழுவில் இல்லா ஒருவரை அப்பாத்திரத்தில் நடிகக் வைத்தால், நாடகம் பார்ப்பவர்களால் மேலும் அப்பாத்திரத்தை ரசிக்க முடியும் என நான் எண்ணியதால், திரு எம் ஆர் கிருஷ்ணசுவாமி என்ற எம் ஆர் கே வை அப்பாத்திரத்தில் நடிக்க வைத்தேன்.

அவருடன் எங்களது நடிகர்கள் நான், மணிபாரதி, ரமேஷ் ஆகியோரும் நடித்தனர்

நாடகம் நான் எதிர்பார்த்தது போல சூப்பர் ஹிட்.

மேடையேறிய இடமெல்லாம் பாராட்டுதல்கள்.

ஆனால்..நாடகத்தை ரசித்தாலும், மக்கள் நாடகம் முடிந்ததும் '"உங்கள் குழுவினரிடமிருந்து எனகளுக்குத் தேவை சிறந்த குடும்ப நாடகங்களேதவிர, நகைச்சுவை நாடகங்கள் அல்ல" என்றனர்.

அப்போதுதான், மக்கள் நம்மைப் பற்றி ஒரு முடிவெடுத்து விட்டால் , அதை மீண்டும் மாற்ற நினைப்பது கடினம் என்பதை உணர்ந்தேன்.

அதற்கேற்றாற் போல அடுத்த நாடகத்தை அரங்கேற்ற, அது மாபெரும்  வெற்றியினைப் பெற்றது.

அது குறித்து அடுத்த பதிவில்

No comments: