Thursday, August 16, 2018

நாடகப்பணியில் நான் -30

உயிருள்ள இறந்தகாலங்கள்..

இந்நாடகம் பற்றி மேலும் சொல்வதாகக் கூறினேன் அல்லவா?சொல்கிறேன்..

எல்லையில் ராணுவ முகாம்.மலையின் பின்னணியில் மூன்று நான் கு டென்டுகள்.ஒரு டென்டிற்கு மட்டும் உள்புறத் தோற்றம்.

ஹெலிகாப்டர்..பறக்கையில் பாம் வெடித்து சிதறும் காட்சி
என அதிரடி அரங்க அமைப்பு.அனைத்து ராணுவ வீரர்கள் கையிலும் ராணுவ துப்பாக்கி

அந்த நாடகத்தில் உளவாளியாக நடித்தவர் நடிகை குட்டி பத்மினி.

திராவிடமணியின் இளமைப் பருவத்தில் நடித்தார் ஒரு புதுமுக இளைஞர்.

அன்று சௌம்யாவில் நடிக்க ஆரம்பித்தவர் இன்றுவரை எனக்கு தோள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த இளைஞர் பி டி ரமேஷ்..

முதல்  நாடகத்திலேயே மைலாப்பூர் அகடெமியின் விருதினைப் பெற்றவர், இன்றுவரை தன் நடிப்பால் பல நிறுவனங்களின் விருதுகளைப் பெற்று வருகிறார்.

இதுவரை சௌம்யா குழுவின் நாடகங்களில் என் மனதிற்குப் பிடித்த நாடகங்களில் இதற்கு முதலிடம் உண்டு.

ஆனாலும், எனக்கு ஏமாற்றம்.இந்த நாடகம் அதிகளவில் பேசப்படவில்லை.அதிகக் காட்சிகளும் நடைபெறவில்லை

அதற்குக் காரணமாய் நான் நினைப்பது..

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு வரவேண்டிய நாடகம், பத்து ஆண்டுகளுக்கு முன்னரே வந்துவிட்டதுதான் என்பதே,

இந்நாடகம் பற்றி முடிப்பதற்கு முன், ராணுவ வீரர்களின் முதல் எழுத்துகளை கூட்டினால் INDIAN என்று வரும் எனச் சொன்னேன் அல்லவா?

அது மட்டுமல்ல..
இந்திரஜித் - பஞ்சாபி
நாராயணன் - மலையாளம்
திராவிடமணி - தமிழ்
ஐசக் - கிறித்துவர்
அஞ்சையா- தெலுங்கு

இனி அடுத்த நாடகம் ஆரம்பிப்பதற்கு முன் எனக்கு சிறு அதிர்ச்சி..

அது என்ன..அடுத்த பதிவில்

(தொடரும்)

No comments: