Monday, March 2, 2009

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே...

வாழ்க்கை இன்பமாய் இருக்க தேவை மூன்று.
1.நல்ல உணவு
2.நல்லதூக்கம்
3.அன்பான வாழ்க்கைத்துணை.

முதல் தேவைக்கும்...மூன்றாம் தேவைக்கும் சற்று தொடர்பு இருப்பதால்..அதை இப்போது பரிசீலிக்க வேண்டாம்.

இரண்டாம் தேவையை...நல்ல தூக்கம்..அதைப் பார்ப்போம்..

உணவைப்போல் தூக்கமும் உடலுக்கு ஊட்டம் தரும் விஷயம் ஆகும்.

தூக்கம் என்பது..சொகுசான விஷயமாகக் கருதப்பட்டு..இப்போது சமூக வாழ்க்கையில் அதன் முக்கியத்துவம் குறைந்துவிட்டது..இரவு முழுதும் வேலை..காலையில் தான் தூக்கம்..அப்படி ஆகிவிட்டது இன்றைய பெரும்பாலான இளைஞர்களுக்கு.

ஒருவனுடைய..சுகம்,துக்கம்,இளைக்கும் தன்மை,பலம், பலவீனம் எல்லாவற்றையும் தூக்கமே தீர்மானிக்கிறது.

மனதிற்கும்..உணர்வுகளுக்கும்..தொடர்பு இல்லாத போது..நாள் முழுக்க உழைத்து மூளை களைப்புறும்போது..நம் கண்கள் பார்ப்பது..மனதில் பதிவதில்லை.காதுகள் கேட்பது மூளைக்கு செல்வதில்லை.நாள் முழுதும் நாம் சேகரித்த விஷயங்களை செரிக்க மூளைக்கு ஓய்வு வேண்டும்.அது தூக்கத்தால் மட்டுமே முடியும்.

இரவில் சீக்கிரம் படுத்து..காலையில் சீக்கிரம் எழுவது நல்லது.சராசரியாக ஏழு மணி முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.கிழக்கு திசையில் தலைவைத்து படுத்தால்..சலனமில்லா ஆழ்ந்த உறக்கம் வரும்.தெற்கு திசை...உடல் களைப்பு நீங்கும்..இவை இரண்டும் ஓகே..

மேற்கே தலைவைத்தால்..பயங்கர கனவுகள்..வரும்.மனக்குழப்பத்திலேயே இருக்கும்.வடக்கு திசையில் தலை வைத்தால்..பூமியின் காந்த மண்டலம் இருப்பதால்..உடலின் ரத்த ஓட்டம் பதிக்கப்படுமாம்.எவ்வளவு தூங்கினாலும்..தூங்கினாற்போல் இராது.

தூக்கம் பற்றி பதிவு போட காரணமாய் இருந்த பரிசலுக்கும்..தாமிராவிற்கும் நன்றி..

8 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தொடர்ந்து எழுதுகிறீர்கள்!
உங்கமேல எனக்குக் கொஞ்சம் பொறாமை இருக்கு!
நல்ல பதிவுகளை கொடுக்கிறீர்கள்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ஜோதிபாரதி

pudugaithendral said...

அருமையான அதே சமயம் அவசியமான பதிவு.

நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி புதுகைத் தென்றல்

goma said...

தூக்கம் நம் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கென அங்கம் வகிக்கிறதென்றால் அதன் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டும்
உணர்த்தியதற்கு பாராட்டுக்கள்.
அதுவும் இரவில் தூங்குவதுதான் ஆரோக்கியமானது ,சரியான பலன் தருவது என்பதையும் தெரிவியுங்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

மணிகண்டன் said...

மதியம் தூங்கறத பத்தி எதுவுமே எழுதலையே நீங்க ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

// மணிகண்டன் said...
மதியம் தூங்கறத பத்தி எதுவுமே எழுதலையே நீங்க ?//


மணி நீங்க எல்லாம் மதியம் தூங்கக்கூடாது