Sunday, January 17, 2010

பாதாம் அல்வா...

மாத முதல் நாள்

கை நிறைய

காந்தி சிரிக்கிறார்

மாதக் கடைசி நாள்

வேக வேகமாக

வேர்த்து கொட்ட வந்து

கல்லூரிக் கட்டணம்

கட்டிய

அன்புத் தந்தை

அண்ணலில் தெரிகிறார்.


2)பழுத்த இலையாய் பெற்றோர்

மலர்ந்த பூவாய் இல்லாள்

மலரத் துடிக்கும் மொட்டாய் மகள்

தோட்டக்காரனாய் நான்


3)பாதாம் அல்வா

சாப்பிட்டபடியே

நெய் ரோஸ்ட்

போண்டா ஆர்டர் செய்கையில்

ஒரு காஃபி மட்டும்

என்கிறான் எதிராளி

என் தட்டை நோக்கியவாறு

வயிறில் லேசான வலி

23 comments:

ரோஸ்விக் said...

//பழுத்த இலையாய் பெற்றோர்

மலர்ந்த பூவாய் இல்லாள்

மலரத் துடிக்கும் மொட்டாய் மகள்

தோட்டக்காரனாய் நான்//

ரொம்ப நல்லாயிருக்கு. வாழ்த்துகள்

goma said...

ஒரு காஃபி மட்டும்

என்கிறான் எதிராளி

என் தட்டை நோக்கியவாறு

வயிறில் லேசான வலி

வாசித்த போது அந்த வலியை நாங்களும் உணர்ந்தோம்

பித்தனின் வாக்கு said...

அழகான கவிதை நடையில் சொல்லியிருக்கின்றீர்கள். மிகவும் நன்று.

S.A. நவாஸுதீன் said...

மூன்றுமே அருமை. இரண்டும் மூன்றும் மிக மிக அருமை

பாலா said...

)பழுத்த இலையாய் பெற்றோர்

மலர்ந்த பூவாய் இல்லாள்

மலரத் துடிக்கும் மொட்டாய் மகள்

தோட்டக்காரனாய் நான்//

அருமையாக உள்ளது...வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ரோஸ்விக் said...

ரொம்ப நல்லாயிருக்கு. வாழ்த்துகள்//

வருகைக்கு நன்றி ரோஸ்விக்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
வாசித்த போது அந்த வலியை நாங்களும் உணர்ந்தோம்//

:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பித்தனின் வாக்கு said...
அழகான கவிதை நடையில் சொல்லியிருக்கின்றீர்கள். மிகவும் நன்று.//

நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//S.A. நவாஸுதீன் said...
மூன்றுமே அருமை. இரண்டும் மூன்றும் மிக மிக அருமை//

வருகைக்கு நன்றி நவாஸுதீன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//negamam said... அருமையாக உள்ளது...வாழ்த்துக்கள்//

நன்றி negamam

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வித்யா

kandathai sollugiren said...

அன்புள்ள அப்பா, கூப்பிடலாமல்லவா? உங்கள் கவிதைகளை படித்தவுடன் மனதிற்குள் எதோ ஒரு பந்து அடைத்துக்கொள்கிறது. மாதத்தின் முதல் நாள் கவிதை மிக மிக அருமை. பாதம் அல்வா நல்ல முடிவு. தொடரட்டும் உங்கள் கவிதை வெள்ளம்.

ஹேமா said...

மூன்றுமே அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி kandathai sollugiren

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஹேமா said...
மூன்றுமே அருமை.//

நன்றி ஹேமா

சிநேகிதன் அக்பர் said...

//ஒரு காஃபி மட்டும்

என்கிறான் எதிராளி

என் தட்டை நோக்கியவாறு

வயிறில் லேசான வலி //

மனசிலும் லேசான வலி.

கவிதைகள் அருமை சார்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

முத்தாய் மூன்றும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
//ஒரு காஃபி மட்டும்

என்கிறான் எதிராளி

என் தட்டை நோக்கியவாறு

வயிறில் லேசான வலி //

மனசிலும் லேசான வலி.

கவிதைகள் அருமை சார்.//

நன்றி அக்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
முத்தாய் மூன்றும்//
நன்றி Starjan

கண்ணகி said...

பாதாம் அல்வா

சாப்பிட்டபடியே

நெய் ரோஸ்ட்

போண்டா ஆர்டர் செய்கையில்

ஒரு காஃபி மட்டும்

என்கிறான் எதிராளி

என் தட்டை நோக்கியவாறு

வயிறில் லேசான வலி...

பசிக்கொடுமை போல் கொடுமை ஏதும் இல்லை...மனம் தொட்ட வரிகள் சார்.

கோவி.கண்ணன் said...

உங்கள் கவிதைகள் சிறப்பாக இருக்கிறது. உங்கள் கவிதைகளை நூலாக்கலாம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி kannaki

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...
உங்கள் கவிதைகள் சிறப்பாக இருக்கிறது. உங்கள் கவிதைகளை நூலாக்கலாம்//

உரிமையை கோவிக்கு தரத் தயார்